அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்

 சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்

இன்று எல்லோரும் அதிகமாக செல்வத்தை தேடி அழைக்கிறோம் ,அதில் சிலர் ஹராமான வழியில் தேடுகிறார்கள் , இன்னும் சிலர் பணம் பணம் பணம் என்று பேயாக அலைகிறார்கள் .கிடைத்ததை கொண்டு மனம் திருப்தி கொள்ளும் சில மனங்கள் தான் உண்டு . இந்த வாழ்க்கை சிறுது காலம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான் ! அந்த சிறிது காலத்தில் அதிகமாக செல்வம் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பேராசை தான் !
உலகின் பேராசையை விடுத்து , பேணுதல் மிகு தூய வாழ்வை மேற்கொண்டு நீண்ட நெடிய மறுமை வாழ்வை வளமுறச் செய்வோமாக ! அல்லாஹ் அருள் புரிவானாக !

மாநபி (ஸல்) பகர்ந்தார்கள் ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ஏழைகள் பணக்காரர்களை விட ஐநூறு வருடங்கள் முந்தி சுவர்க்கத்தில் நுழைவார்கள் . (திர்மிதி)

அண்ணல் நபி (ஸல்) நிவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) இமரான் பின் ஹூசைன் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் அறிவிக்கிறார்கள் : நான் சுவனத்தை உற்றுப் பார்த்தேன் . அதில் வசிப்பவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருப்பதை பார்த்தேன் . நான் நரகை உற்றுப் பார்த்தேன் . அதில் வசிப்பவ்களில் அதிகமானோர் பெண்களாக இருப்பதை பார்த்தேன் . (புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) பகர்ந்தார்கள் ஹஜ்ரத் கஃ பு பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஓர் ஆட்டு மந்தையில் அவிழ்த்து விடப்பட்ட இரண்டு பசியான ஒனாயிகள் , அம்மந்தையை நாசமாக்குவதை விட அதிகமாக செல்வத்தின் மீதும் பதவியின் மீதும் உள்ள மனிதனின் பேராசை , அவனது  தீனை நாசமாக்கிவிடுகிறது .     (திர்மிதி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அறிவிக்கிறார்கள் : நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமுகம் வந்தேன் .அப்பொழுது  அல்ஹாகு முத்த்க்காதுரு சூராவை அவர்கள் ஓதிகொண்டிருந்தார்கள் அப்பொழுது ஆதமின் மகன் என் செல்வம் என் செல்வம் என்று கூறுகிறான் . ஆதமின் மகனே! உன் செல்வதிலிருந்து நீ சாப்பிட்டு அழித்தவை தவிர , ஆலது நீ உடுத்திக் கிழித்தவை தவிர அல்லது தானதர்மம் செய்து முடித்தவை தவிர வேறு ஏதேனும் உனக்கு (மீதமாக) உள்ளதா ? என அண்ணல் நபி (ஸல்) கேட்டார்கள். (முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) கூறத் தாம் செவிமடுதத்தாக ஹஜ்ரத் கஃ பு பின் இயாள் (ரலி) கூறுகிறார்கள் .நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திருக்கும் ஒரு சோதனை உண்டு . என் சமுதாயதிருக்கு சோதனை செல்வம் ஆகும் .(என் சமுதாய மக்கள்க்குச் செல்வம் பெருகி அதனால் அவர்கள் சோதிக்கப்படுவார்) (திர்மிதி)

நாம் சிந்திக்க வேண்டும் ! இன்ஷாஅல்லாஹ் ஒரு நாள் மரணத்தை சந்திக்க வேண்டும்! அதிக செல்வத்தின் காரணத்தினால் அல்லாஹ்விடம் கணக்கு கொடுக்க வேண்டும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!