அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், அக்டோபர் 30, 2013

திருடனோ திருடியோ

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திருக்கு ,அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக -அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள் .அல்லாஹ் மிகைத்தவனும் ,ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான் .அல்குர் ஆன் :பகுதி 6:அத் 5 :வசனம்:38


எவரேனும் தம் தீயச் செயலுக்காக மனம் வருந்தி தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று ) மன்னிக்கிறான் ; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும் ,கருணையுடையோனுமாகவும் இருக்கிறான் .
அல்குர் ஆன் : வசனம்39)

மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சட்டம் இஸ்லாமிய சட்டம் மட்டும் தான் ,அது படைத்தவன் இயற்றிய சட்டம் . ஒருவன் திருடினால் அவனுக்கு தண்டனை எப்படி கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான் : அவன் கரத்தை தரித்து விட வேண்டும் ! அப்படி செய்வதினால் (அல்லாஹ்வின் சட்டத்தை நாம் நிறைவேற்றி வந்தோம் என்றால் ) குற்றம் குறையும் . மாறாக வெறும் சாதாரண தண்டனை அவனுக்கு கொடுத்து விட்டு ஒரு மாதம் அல்லது அதற்க்கு அதிகமாக சிறையில் பிடித்து அவனை அடைத்தால்  .பிறகு என்ன ஆகும் நிலைமை ? அவன் திரும்ப வந்து பழைய தொழிலைத்தான் செய்வான் என்பது உறுதி! இது அரசாங்கத்துக்கு தெரியாதா ? மக்களுக்கு புரியாதா ? இன்று என்ன நடக்கிறது , எங்கு பார்த்தாலும் திருட்டு ,கொலை கொள்ளை அதிகமாகத்தான் நடந்து கொண்டு வருகிறது .மனிதன் சட்டம் என்ன செய்ய முடிகிறது , எதுவும் சாதிக்க முடியாது ! யார் வீட்டிலுள்ள பணமோ அல்லது நகையோ திருட்டு போனால் , போலிஸ் வரும் கூடவே மோப்பம் பிடிக்கும் நாய் யும் வரும் ரொம்ப பரப்பரப்பாக இருக்கும் அன்றும் மட்டும் ,பிறகு என்ன நடக்கும் , ? வழக்கம் போல் போலிஸ் சொல்லும் ஒரே செய்தி , நாங்கள் தேடி வருகிறோம் சீக்கிரம் திருடன் பிடிப்பட்டு விடுவான் என்று சொல்லி விடுவார்கள் ! அன்று முதல் இன்று வரை இப்படிதான் நடக்கிறது , இன்னும் அப்படிதான் நடக்கும் புதிதாக ஆட்சி மாறினாலும் கூட . மக்கள் எதற்கெல்லாம் போராட்டம் ,ஆர்ப்பாட்டம் என்று கொடி பிடிகிறார்கள் , கோஷம் போடுகிறார்கள் , ஆனால் , இதுபோன்ற திருட்டு , கொள்ளை சம்பவத்துக்கு குரல் கொடுக்க யாரும் முன் வருவதில்லை , இஸ்லாமிய சட்டம் தான் சிறந்த சட்டம் என்று சொல்வதற்கு மனசு இடம் தரவில்லை .

ஒருவன் திருடினால் , அவனுக்கு இஸ்லாமிய சட்டம் முறைப்படி தண்டனை கொடுத்தால் ,பிறக எத்தனை பேர் திருட பயப்படுவார்கள் , திருடினால் நிச்சயமாக நம் கரம் துண்டிக்கப்படும் என்று அச்சம் , உணர்வு ஏற்படும் . மக்கள்கள் நிம்மதியாக , அச்சமின்றி வாழ வேன்டும்மென்றால் , நிச்சயமாக இஸ்லாமிய சட்டம் வர வேண்டும் , அதை அமல்படுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!