அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், நவம்பர் 18, 2013

ஹதீஸ்கள் வாசிக்க :




பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டை (சதகாவாக ) கொடுத்தாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் .அதையும் கிடைக்கப் பெறாத சமயத்தில் அழகிய வார்த்தையைக் கூறுவது கொண்டாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் என ரசூல்(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அதீய் (ரலி)
ஆதாரம்:புகாரீ.

நீர் ஐந்து விஷயங்களுக்கு புண் ஐந்து விஷயங்களை முன் அறிய வாய்ப்புகளாய்க் கருதுவீராக!
நீர் முதுமையடையவதர்க்கு முன்னால் உம் இளமையும் . நீர் நோயுருவதற்கு முன் உம் ஆரோக்கியத்தையும் . நீர் ஏழ்மையடைவதற்கு முன் உம் செல்வ நிலையையும் . நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமது ஓய்வு நேரத்தையும் .உனது மரணத்துக்கு முன் உன்  வாழ்வையும் நீர் அறிய வாய்ப்புகளாக கருதிப் பயன்படுத்திகொள் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்:அம்ர் (ரலி)
ஆதாரம்: திர்மிதி.

சண்டையின் போது அடுத்தவனை வீழ்த்துபவன் வீரனல்லன் ; மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரனாவான் என ரசூல்(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்.

செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தைப் பெறுவதல்ல .போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்:புகாரீ, முஸ்லிம்.

மக்களுக்க மத்தியில் சீர்திருத்தம் செய்யும் எண்ணத்தில் நல்லதை கூறி நல்லதை பரப்புபவன் பொய்யன் அல்ல என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்முகுல்சூம் (ரலி)
ஆதாரம்: புகாரீ ,முஸ்லிம் .

துஆவை விட அல்லாஹ்விடம் எதுவும் சங்கையான தாக இல்லை என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
ஆதாரம்: திர்மிதி

அல்லாஹ்விற்காக பணிந்து நடப்பவரை அல்லாஹ் உயர்த்துகிறான் . எவன் பெருமையடிக்கிரானோ அல்லாஹ் அவனை தாழ்த்திவிடுகிறான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:உமர் (ரலி)
ஆதாரம்: பைஹகி
மிஷ்காத் 434

நற்செயல் களை (பிறருக்கு ) அறிவித்து கொடுப்பவனுக்கு அதைச் செய்தது போன்ற கூலியுண்டு என ரசூல் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூமஸ் ஊத் (ரலி)
ஆதாரம்: முஸ்லிம் .

மென்மையை இழந்தவன் நன்மையை இழப்பான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:ஜரீர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!