திங்கள், நவம்பர் 04, 2013

பிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்!

பிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்!
கள்ள கபடம் இல்லாத உள்ளம் தாயின் உள்ளம் ! நிலாவைக் காட்டி சோறு ஊட்டும் தாயின் பாசம் .ஒரு அழகான ஹதீஸின் கருத்து :

பெற்றோரின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது . பெற்றோரின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம்: திர்மிதி.


பிள்ளை செல்வங்களே ! உங்கள் பெற்றோருக்கு ஒரு நல்ல சாலிஹான பிள்ளையாக இருங்கள் ! அவர்கள் சொல்வதை கேளுங்கள் ! உங்கள் நேரங்களை வீணாக இன்டர்நெட் மூலமாக ,அல்லது facebook மூலமாக கழிக்காதீர்கள் .அவசியம் இருப்பினும் பார்க்க வேண்டியதுதான் ! சில நேரம் பொழுது போக்கு என்று நேரம் கழிப்பது தவறு இல்லை என்றாலும் , நாள் முழுதும் அல்லது அதிக நேரம் எடுத்து கொள்வது கூடாது . நீங்கள் இன்டர்நெட் தில் இருக்கும் பொழுது ,அப்பொழுது தாய் அல்லது தந்தை அழைத்தால் , அதை விட்டு விட்டு அவர்களின் அழைப்புக்கு பதில் அளிக்க வேண்டும்! இது நல்ல பிள்ளைக்கு அழகு !

பெற்றோர்களின் அருமை ,பெருமையை எழுத்து வடிவத்தில் தர முடியாது . அவர்களின் சிறப்பு மதிப்பு ,கண்ணியம் இவைகள் யாவும் பிள்ளைகளாகிய நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும்!

இன்று பெரும்பாலும் பிள்ளைகள் நேரத்தை டிவி இலும் , இன்டர்நெட் , facebook , கேம் , இப்படி பொழுது கழிகிறார்கள் . பொழுது போக்கு அப்படி என்ன தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு இப்படியா நாள் முழுதும் நேரத்தை கழிப்பது , இது சரியான முறையா ?

பிள்ளைகள் அனைத்தும் செய்ய வேண்டும் ! படிப்பு நேரத்தில் படிக்க வேண்டும்! தாய் க்கு உதவி செய்வதில் உத வ வேண்டும்! விளையாட்டு நேரத்தில் விளையாட வேண்டும்! நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும் ! பிறருக்கு உதவி செய்ய வேண்டும்! மொத்தத்தில் பெற்றோருக்கு ஒரு நல்ல பிள்ளையாக வும் ! ஊருக்கு பெயர் சொல்லும் பிள்ளைகளாகவும் ! மக்களுக்கு நல்லவனாகவும் இருக்க வேண்டும்!

அம்மா.
உன்னை நினைக்கும்
போது எனக்குள்
எல்லா நரம்பும் இரத்தத்தை
கடத்தவில்லை - உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!!!

பிள்ளை பருவத்தில்
செல்ல காயம் வந்தால் கூட
விளையாட்டுக் காயங்கலாக
எடுக்காமல் -உன் கண்ணுக்கு
திரியை வைத்து விடிய விடிய
விளக்காய் எரிவாயே
தாயே ....!!!

சிறு வயதில் எல்லோருக்கும்
பசியதிகம் -பள்ளி விட்டு வந்து
படாத பாடு படுத்திவிடுவேன்
உன் காலை உணவை எனக்காக
வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய்
தாயே ......!!!

என் புத்தகச் சுமை
உன் வலது தோலில் சுமப்பாய் ...
செருப்பில்லாத பாதங்களேடு....
இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய்.
வீடு வந்தவுடம் களைத்து விட்டாய்
மகனே என்று -உன் களைப்பை
பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு
தாயே .....!!!

அ - வரிசையில் சொற்கள் சொல்லடா
அம்மா என்பேன் -உலகிலேயே
அப்படி சொன்ன முதல் பிள்ளை
என்பது போல் இனிமேல் யாரும்
சொல்ல மாட்டார்கள் என்பது போல்
உள்ளம் குளிர்வாய் ..
தாயே .....!!!

நான் பெற்ற சின்ன வெற்றிகளை
உலகசாதனைபோல் ஊர் முழுக்க
தம்பட்டம் அடிக்கும் -உன்
கதையை மற்றவர்கள் -அலட்டல்
என்று சொல்வார்கள் -எனக்கு
அதுதான் தாயே எனக்கு -உன்
ஊட்ட பானம்
தாயே ....!!!

வேலை தேடும் வயதில்
வெறும் கையோடு வருவேன்
எல்லோர் முகத்திலும் சோர்வு
தாயே -உன் முகத்தில் மட்டும்
எதுக்கடா கவலை படுற
நாளை கிடைக்குமடா மகனே
என்று - ஆறுதல் கரமானது
நீட்டியது உன்னை தவிர யார்
தாயே ......!!!

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்
முதல் காசு எடுத்து உன்
முந்தானையில் முடிந்து
கோயிலுக்கு அர்ச்சனை செய்தாயே
தாயே .....!!!

எப்படியெல்லாம் வாழ்ந்த நான்
இப்போ தாயே நீயில்லாமல்
வாழும் உலகம் - மனிதரே
வாழாத செவ்வாய் கிரகத்தில்
வாழ்வதுபோல் இருக்கு
தாயே ....!!!

தாயே உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் உனக்கு மகனாய்
நான் பிறக்க வேண்டும் வா ...
தாயே .....!!!
நன்றி சிறுகதை நண்பர்கள் தளம் ! ( இந்த கவிதை மட்டும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!