ஞாயிறு, டிசம்பர் 22, 2013

கப்ரு வேதனை



கப்ரு வேதனை....
கடல் பயணத்தின் இறந்தவர்கள் , உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள் . மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகியப் போனவர்கள். ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு ?

என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது..

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெருன்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகிறது . மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது . இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும் , முஸ்லிம் அல்லாதவர்கலானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். முஸ்லிமல்லாதவர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன .

மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற நிலை ஏற்படும். ஏனெனில்  அவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுன்கின்றனர் .
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.


முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது " என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் !" என்று கூறுவான் . அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான் . அவன் அதைக் கூறுகிறான்.அவர்கள் உயிர்ப்பிக்கப்படும்  நாள் வரை அவர்களுக்கு பின்னால் திரை உள்ளது .
அல்குர் ஆன் :23:100)

கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது இந்த வசனத்திலிருந்து புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை .

ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு கெட்டவர் அடக்கம் செய்யப்படுகின்றார் . அடக்கம் செய்த இடத்திற்குலேயே வேதனை நடக்கிறது என்றால் இங்கே கருத்துக் குழப்பம் ஏற்படும்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும் , மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான் . எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான் . சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர் ஆன் :39:42)

அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவு . நமது புலனுக்கு தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு  அவன் வேதனையோ , சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் " எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது" என்ற கருத்து நிலை பெரும்.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும் , சியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் மட்டையைப் பிளந்து  ஊன்றியதும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே .

இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகின்றது என்று நாம் முடிவு செய்தால் முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற நிலை ஏற்படுகின்றது.

அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும் . அடக்கம் செய்யப்படாதவர்களுக்கு வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது இறைவனுக்கு சிரமமல்ல .

அல்லது அனைவர்க்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம் .

அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத் தளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம் . எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விதி விளக்கு பெற முடியாது என்பதில் சந்தேகம் இல்லை .

ஆகையால் , கப்ரு வேதனையிலிருந்து நாம் அதிகம் அதிகம் ஈடேற்றம் பெற துஆச் செய்ய வேண்டும். சூரா முல்க் என்ற வசனத்தை நாம் மனனம் செய்து தினம் தோறும் ஓதி வர வேண்டும் . அந்த சூராவின் சிறப்பு அதிகம். அந்த சூராவை ஓதி இறந்த நம் பெற்றோர்களுக்கு செய்யலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!