இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காஃபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகலைத் தான் ; மகான்களை அல்ல என்று சிலருக்கு சந்தேகம் எழலாம் . இது அப்படியில்லாத சந்தேகமாகும் .
அல்லாஹ்வைத் தவிர எவரையும் , எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை . இதில் சமாதியையும் சிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரமும் இல்லை . சிலைகளும் , சமாதிகளும் இதில் சமமானவை தான் .
மக்கத்துக் காஃபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான் . நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர் .
இந்த வாதமும் தவறானதாகும் . ஏனெனில் மக்கா காஃபிர்கள் வணங்கியதும் பெரும்பாலும் நல்லடியார்களையும் , நபிமார்களையும் தான் . இதற்க்கு ஹதீஸ்கள் ஆதாரம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது காஃபாவுகுல் இப்ராஹீம் (அலை) , இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகள் கண்டார்கள் . அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள் .
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ
மற்றொரு அறிவிப்பில் இப்ராஹீம் நபி , மர்யம் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது .
நூல்: புகாரீ .
நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்வதும் , அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களை வழிபடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறபபடுத்திருக்க வேண்டியதில்லை .
" யூத கிறித்தவர்கள் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர் " என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் .
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரீ.
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: அபூஹுர்ரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் .
அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர் . அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் புகாரீ .
சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும் , அது பூசப்படுவதையும் , அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் .
இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும் , சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.
"சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே " என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தின் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.
வணக்கம் என்றால் என்ன ?
"அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் வணங்கக் கூடாது " என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர் .
உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை . இவை அல்லாத இன்னும் பல வணக்கங்கள் உள்ளன .
அறுத்துப் பலியிடல் வணக்கமே!
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக !
அல்குர் ஆன் : 108.2)
இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும் . அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான் . தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர எவருக்காகவும் தொழுவதில்லை .
ஆனால் , அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுகின்றனர் . இத்தகையோருக்கு இந்த வசனத்தின் சரியான விளக்கம் அமைந்துள்ளது.
" யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அருக்கின்றானோ , அவனை அல்லாஹ் சபிக்கிறான் " என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் .
அறிவிப்பவர் :அலீ (ரலி)
நூல்: முஸ்லிம்.
சகோதர ,சகோதரிகளே!
சிந்தித்து பார்க்கவும் !
அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!