அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

சிலைகள் வேறு ! சமாதிகள் வேறு!




இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காஃபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகலைத் தான் ; மகான்களை அல்ல என்று சிலருக்கு சந்தேகம் எழலாம் . இது அப்படியில்லாத சந்தேகமாகும் .

அல்லாஹ்வைத் தவிர எவரையும் , எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை . இதில் சமாதியையும்  சிலைகளையும் வேறுபடுத்திப்  பார்க்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரமும் இல்லை . சிலைகளும் , சமாதிகளும் இதில் சமமானவை தான் .

மக்கத்துக் காஃபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான் . நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர் .
இந்த வாதமும் தவறானதாகும் . ஏனெனில் மக்கா காஃபிர்கள் வணங்கியதும் பெரும்பாலும்  நல்லடியார்களையும் , நபிமார்களையும் தான் . இதற்க்கு ஹதீஸ்கள் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது காஃபாவுகுல்  இப்ராஹீம் (அலை) , இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகள்  கண்டார்கள் . அவற்றைத்  தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே  நுழைந்தார்கள் .
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ

மற்றொரு அறிவிப்பில் இப்ராஹீம் நபி , மர்யம் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது .
நூல்: புகாரீ .

நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்வதும் , அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத்  தருவார்கள் என்று நம்பி அவர்களை வழிபடுவதும்  மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறபபடுத்திருக்க வேண்டியதில்லை .

" யூத கிறித்தவர்கள் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர் " என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் .
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரீ.

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக  ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில்  விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: அபூஹுர்ரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் .

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர் . அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் புகாரீ .

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும் , அது பூசப்படுவதையும் , அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் .

இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும் , சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.
"சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே " என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தின் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

வணக்கம் என்றால் என்ன ?
"அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் வணங்கக் கூடாது " என்று ஒப்புக் கொள்ளும்  முஸ்லிம்களில்  சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர் .

உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை . இவை அல்லாத இன்னும் பல வணக்கங்கள் உள்ளன .

அறுத்துப் பலியிடல் வணக்கமே!

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக !
அல்குர் ஆன் : 108.2)

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும் . அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட  வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான் . தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர எவருக்காகவும் தொழுவதில்லை .

ஆனால் , அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுகின்றனர் . இத்தகையோருக்கு இந்த வசனத்தின் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

" யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அருக்கின்றானோ , அவனை அல்லாஹ் சபிக்கிறான் " என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் .
அறிவிப்பவர் :அலீ (ரலி)
நூல்: முஸ்லிம்.

சகோதர ,சகோதரிகளே!
சிந்தித்து பார்க்கவும் !
அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!