அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

புதன், ஜனவரி 29, 2014

ஷைத்தானின் சூழ்ச்சி (இறுதிப் பகுதி)




அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஷைத்தானை விட்டு என்றும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.


இப்பொழுது உன் அகநிலையை வெளிப்படுத்தி புனித இஸ்லாத்தைக் கொண்டு உன்னையே நீ விசாரணை செய்து பார்! உண்மை வெளியாகும். நாணம் இல்லையா ? அல்லது அச்சம் இல்லையா ? இஸ்லாமிய நெறிமுறைகளும் , கலாச்சாரம், கொள்கையும், கோட்பாடுகளும் உன்னை விட்டும் எங்கே போய்விட்டது ? உன்னுடைய  கொள்கையும் , குறிக்கோளும் , சுகபோகமான வாழ்வுக்குரிய வசதிகளைத் தேடி அலைவதாகவே ஆகிவிட்டனவே ! இந்நிலையில் அல்லாஹ்வுடைய  மார்க்கத்தை கொண்டு வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுகின்றாயா ? அல்லது ஷைத்தானைப் பின் தொடர்கின்றாயா ? நீயே முடிவு செய்து கொள். உன் நிலை குறித்து வருத்தப்பட்டு அனுதாபப்படுவதைத் தவிர வேறெதுவும் இல்லை. சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது .இறைவனைச் சந்திக்கும் நேரம் வரும். அதற்க்கு முன் நாம் நிறைய பாவங்களைக் கழுவ வேண்டும் . அல்லாஹ்வைச் சந்திக்கும்போது எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நல்ல தூய உள்ளத்துடன் இருக்க வேண்டும்.

"கனி இருக்க காய் கவர்ந்தற்று " என்று வார்த்தைக்கு ஏற்ப சுவைத்துப் பேரானந்தம்  பெற இஸ்லாம் என்ற கனி கையில் இருக்க , காயாகிய இவ்வுலகத்தைக் கண்டு ஆனந்திக்கும் வகையில் அவதிபடுகின்றாயே ஏன்? பாவா ஆதம் (அலை) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊசாட்டங்கலைச் சரி எனத் தீர்மானித்து செயல்பட்டபோது , அச்செயலானது அவர்களைப் பாவியாகிவிட்டது. இந்த முறையில் அவர்களது இவ்வுலக வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது . இப்போது அவர்கள் "தௌபா " வேண்டுகின்றார்கள். அன்புச் சகோதர ! சகோதரிகளே! நன்றாக சிந்தனை செய்து பாருங்கள்! உங்களில் ஏற்படும் ஊசாட்டங்கலும் தீர்மானங்களும் செயல்பாடுகளும் இவ்வுலகப் பயணத்தைத் தொடர்வதாக உள்ளதா ? அல்லது மறு உலகப் பயணத்தை சார்ந்ததாக உள்ளதா ?

மவுத்துக்கு பின்புதான் அதிலும் கியாம நாளைக்குப் பிறகுதான் மறு உலக வாழ்வு என்கிறீர்களா ?  ஆம்! உண்மைதான் . என்றாலும் இவ்வுலகப் பயணத்திலேயே மறு உலகப் பயணத்தைத் தொடங்கி விட கடமைப்பட்டுள்ளீர்கள் . ஆதமும் (அலை) ஹவ்வாவும் சுவனபதிக்கு உரித்தானவர்களாக ஆக்கப்பட்டிருந்த (காலத்தை) நிலையை கவனத்திருக்கு கொண்டு வாருங்கள்.

அவர்கள் பாவம் செய்வதற்குண்டான முதல்படி  என்ன என்பதை இப்போது சொல்லுங்கள்; தொடர்ந்து அடுத்துஅடுத்து ஏற்பட்ட மாறுதல்களையும் கவனியுங்கள். இச் சம்பவங்களை  திருகுரானில் பிரஸ்தாபித்து ஆதமுடைய மக்களாகிய நமக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளான் .எச்சரிக்கைக்கு பயப்படுங்கள்! விழித்து எழுங்கள் ! நன்மையை நாடிப் புறப்படுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான் : "இவ்வாறு அவன் அவ்விருவரையும் ஏமாற்றி , அவர்கள் தங்கள் (நிலையிலிருந்து) கீழே இறங்கும்படி செய்தான். அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை ) ச் சுவைத்தார்கள் . அவர்களுடைய வெட்கத் தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று . அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக் கொள்ள முயன்றனர் ; அப்போது அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு ; உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா ? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன்  என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா ? என்று கேட்டான் .
குர் ஆன் : 7-22)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் , அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்கள் விட்டும் களைந்து , சுவன பதியைவிட்டு வெளியேற்றியது போல அவன் உங்களை ஏமாற்றி சோதனைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். (நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு ) மெய்யாகவே நாம் ஷைத்தான்களை இறை நம்பிக்கை இல்லாதவரின் நண்பர்களாக்கி இருகின்றோம் .
குர் ஆன் :7 -27)

அல்லாஹ் மிக அறிந்தவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!