அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

ஞாயிறு, மார்ச் 02, 2014

சத்தியத்தை முறிக்காதீர்கள் !



அல்லாஹ்வின் திருபெயரால் ...

"அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதனை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சத்தியத்தை நீங்கள் முறித்து விடாதீர்கள்."
அல்குர் ஆன் :

முஸ்லிம்களாகிய நாம் கலிமா ஷஹாதத் உரைக்கும் போது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகிறோம் .
குடும்பத் தகராறுகள் தீர்க்க , கொடுக்கல் வாங்கல், நிலம் , வீடு வாங்க , பேச்சு வார்த்தைகளை உறுதிப்படுத்த பொருட்களை பிறரிடம் ஒப்படைக்கும்  போது , கற்புக்கு களங்கம் விளைவிக்கும்போது என்று பல்வேறு விஷயங்களில் சாட்சியங்கள் தேவைப்படுகின்றன . நீதிமன்றத்தில் வழக்குகள் அரங்கேறும் போது போதுமான சாட்சியங்கள் தேவைப்படுகின்றன . மறுமை தீர்ப்பு நாளில் அவரவர் காதுகளும் , கண்களும் , தோள்களும் சாட்சியம் கூறும் என அல்லாஹுதஆலா அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறான் .

வழக்காடும்போது பொய் சாட்சிகளைக் கொண்டு உண்மையைத் தலைகீழாக மாற்றி விடும் ஆற்றல் படைத்தவரும் இருக்கவே செய்கிறார்கள் . இவர்கள் பணம் , பதவிகளுக்கு ஆசைப்பட்டு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் . இவர்கள் இவ்வுலகில்  தப்பி விட்டாலும் மறுமையில் பதில் சொல்லியேயாக வேண்டுமென்பதையும் அதற்குரிய தண்டனை இம்மையில் கிடைக்கா விட்டாலும் மறுமையில் நரக நெருப்பு சித்தமாக்கப்பட்டு விட்டது என்பதைப் பற்றி சிந்திக்காதவர்கள் .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹுதஆலா திருக்குர் ஆன் நஹ்ல் சூராவின் வசனத்தில் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்தவர்கள் உடன்படிக்கைகளை வாக்குறுதியை எந்த காரணத்திற்காகவும் முறித்து விடுவது ஏற்புடையதல்ல  என அறுதியிட்டு அறிவிக்கிறான் . மனிதர்கள் அனைவரைக் காட்டிலும் அல்லாஹ் ஒருவனே நம்பிக்கைக்குரியவன் . ஒவ்வொரு சிறு செயலையும் நன்கறிபவன் . எனவே அவனை முழுமையாக நம்பி, அவனின் கடுமையான தண்டனைக்கு அஞ்சி , சத்தியங்களை முறித்து விடாமல் எச்சரிக்கையாகவும் , கவனமாகவும் இருக்க அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும் . இத்தகையவர்களே நல்லோர் பட்டியலில் இடம் பெறுவார்கள்!

Allah knows best.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!