அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, மார்ச் 08, 2014

ஐவேளைத் தொழுகை

''பாருங்கள்! உங்களில் ஒருவர்[வீட்டு] வாயிற்படி , முன் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்க அதில் அவர் தினசரி ஐந்து வேலை குளித்துக் கொண்டிருந்தால் , உங்கள் கருத்தில் அவர் உடல் மீது கொஞ்சாமாவது அழுக்குத் தங்கியிருக்குமென எண்ணுகிறீர்களா? என்று அண்ணல் நபி[ஸல்] அவர்கள் கேட்க , அருகிலிருந்தவர்கள்  ''அவ்வாறிருந்தால் எவ்வித அழுக்கும் இருக்க முடியாது !'' என்றனர் . ''இதே உதாரணம் போன்று தான் . ஐ வேளைத்  தொழுகையாக இருக்கிறது ,, அதாவது அத்தொழுகைகளில் மூலமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை அழித்துவிடுகிறான் '' என்றார்கள் , அண்ணலார்.
ஆதாரம் .. புகாரீ ,முஸ்லிம் திர்மிதி ]


தொழுகை பாவங்களை அழித்து  விடுகிறது ,, தொழக் கூடியவருக்குப் பாவச் சிந்தனை ஏற்படுவதில்லை . தொழுது கொண்டே பாவமும் செய்வது பெரும் குற்றமாகும் .
ஒருவர் தொழுகிறார் , அவரின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் . அப்படி அவரின் வாழ்க்கை சரியாக நல்ல சாலிஹான மனிதர் போன்று இருந்தார் என்றால் . அவரின் தொழுகை  சரியாக இருக்கும் என்று கண்ணித்துக் கொள்ளலாம் .

கவலையைப் போக்கும் அருமருந்து !

அண்ணல் நபி [ஸல்] அவர்களுக்குக் கவலை தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், தொழ ஆரம்பித்துவிடுவார்கள்  .
ஆதாரம் .. அபூதாவூத் ]

நமக்கு ஏதாவது கவலை ஏற்பட்டால் அப்படி செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்  ! கவலையைப் போக்கும் அருமருந்து இந்த தொழுகைத் தான்  என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்  .

தொழாத பிள்ளைகளை அடியுங்கள்

சிறுவன் எழு வயது அடைந்து விட்டால், அவனைத் தொழுது கொள்ளுமாறு உத்திரவிடுங்கள் ,, பத்து வயது அடைந்த பிறகு அவன் தொழவில்லை என்றால் , அதற்காக அவனை அடியுங்கள்  .
ஆதாரம் .. அபூதாவூத்,, திர்மிதி

இன்று பள்ளிகூடத்திற்கு  போகவில்லை என்றால் தான் , நம் பிள்ளைகளை அடிப்போம் . அவர்கள் தொழாமல் இருந்தால் கண்டுக்க மாட்டோம் . நாமே தொழ  மாட்டோம்  , பிறகு எங்கே பிள்ளைகளுக்கு தொழும்படி சொல்ல முடியும்? இப்படிதான் பெரும்பாலும் குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

தாமதப்படுத்தக் கூடாத மூன்று விஷயங்கள் !

''ஓ அலீயே ! மூன்று விஷயங்களில் தாமதம் செய்யாதீர்கள் ,, தொழுகை நேரம் வந்ததும் [தொழுது கொள்ளும்] ஜனாஸா அதற்குரிய கிரியைகள் முடிந்ததும் [அடக்கம் செய்வதில்] விதவைக்கு அவளுக்குப் பொருத்தமான ஜோடி கிடைத்து விட்டால்[ அவளைத் திருமணம் செய்து கொடுப்பதில்]
ஆதாரம் .. திர்மிதி ]

தொழுகை நேரம் கழிந்து விட்டால் அதற்குரிய நன்மை போய்விடும் . மரணம் எல்லோருக்கும் உண்டு. எனவே , மரணித்தவரைச் சீக்கிரம் அடக்கம் செய்து துக்கம்  விசாரிக்க வந்தவர்களை விரைவில் விடைகொடுத்து அனுப்பிவிட்டால் , அவர்களுக்குத் தத்தம் வேளைகளில் ஈடுபட்டுக் கொள்ளச் சவுகரியமாக இருக்கும். இதேபோன்று விதவைக்கு தகுதியான மாப்பிளைக் கிடைத்து விட்டால் , உடனடியாகத் திருமணம் செய்து  வைத்து, விதவையின் துயரத்தை துடைக்கவேண்டும்.

நம்மிடத்தில் இருக்கும் ஒரு பெரிய கெட்டபழக்கம் என்னெவென்றால் , இந்த ஜனாச விடயத்தில் நாம்  இன்றுவரை ரொம்ப தாமதப் படுத்துகிறோம் என்பது ஒரு வேதனையாக தான் இருக்கிறது.

நிர்வாணம் கூடாது

ஒரு நாயகத் தோழர், அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் , ''அல்லாஹ்வின் தூதரே! தனது மர்மஸ்தானத்தை யார்  முன்னாள் மறைப்பது ? யார் முன்னால்  மறைக்காமலிருப்பது  ? என்று கேட்டார் . அதற்கு அண்ணலார், ''தன்னுடைய மனைவி  [விலைக்கு வாங்கி] வீட்டிலுள்ள அடிமைப் பெண் ஆகியோரைத் தவிர , மற்ற எல்லாரும்  முன்னாலும் மறைக்க வேண்டும் !'' என்றார்கள் . ''ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன் [எப்போதுமே] சேர்ந்திருக்கிறார் , அப்பொழுது? என்று கேட்டார்  , அந்த நாயகத் தோழர் , ''அத்தகையச் சமயங்களிலும், முடிந்தவரை உங்கள் மர்மஸ்தானத்தை அவர் பார்க்காதவாறு மறைத்துக் கொள்ளவும்!'' என்றார்கள் அண்ணலார். ''ஒருவர் தனித்திருக்கும் பொழுது? என்று கேட்டார், அந்தநாயகத் தோழர்  , அதற்க்கு அண்ணலார், ''அல்லாஹ்விற்குள்ள உரிமை அதிகமாயிருக்கிறது,, மனிதர்களைவிட அல்லாஹ்விடம் அதிகம் வெட்கப்படும் என்றார்கள்.

ஆதாரம் ..அபூதாவூத்]
 இதன் கருத்து என்னெவென்றால் , ஒரு மனிதன் பிறந்த மேனியாக நிர்வானமாயிருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே  !

ஒரே விரிப்பில் இருவர் படுக்கக்கூடாது

ஓர் ஆண் , இன்னொரு ஆணுடைய மர்மஸ்தானைதைப் பார்க்கக் கூடாது,, ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணுடைய மர்மஸ்தானத்தைப்  பார்க்கக் கூடாது! ஓர் ஆண்  , இன்னொரு ஆணை அணைத்தவாறு ஒரே விரிப்பில் படுக்கக் கூடாது,, ஒரு பெண் இன்னொரு  பெண்ணை அணைத்தவாறு ஒரே விரிப்பில் படுக்கக்கூடாது.
ஆதாரம்.. முஸ்லிம் ,, அபூதாவூத்]

இன்று கல்லூரிகளில் படிக்கும் சில பெண்கள் . அவர்கள் ஹாஸ்ட்டலில் தங்கி இருந்து படிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது தவறான பழக்க, வழக்கங்கள் ஏற்படுகிறது  . விளயாட்டகாவும் , ஒருவரை ஒருவர் தவறான முறையில்  கெட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் . சில தவர்களும் நடக்கிறது. அப்படி  நம் இஸ்லாமிய பெண்கள் தங்க நேரிட்டால் . அவர்கள் கடமைகளை செய்து முடித்த பிறகு  , அவர்கள் திலாவத் குரான் ஓதுவதும் , மார்க்க கல்வியை கற்பதுமாக அவர்கள் நேரத்தை கழிக்க வேண்டும்  . மாற்றுமத சகோதரிகளின் மனதில் ஈர்க்கும்  வகையாக , இஸ்லாத்தை தழுவும் விதமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் ''ஓர் ஆணின் தொடையையும் மர்மஸ்தானப் பகுதி'' என்று கணித்தார்கள் .
ஆதாரம்.. திர்மிதி]

ஒரு பெண்ணின் எல்லாப் பகுதியும் வசீகரம் நிறைந்தது,, ஓர் ஆணின் முகம் கவர்ச்சி தருவதைப் போல அவனது தொடையும் கவர்ச்சி தரக் கூடியதாயிருக்கிறது. எனவே, அதனை மூடுவதும் அவசியமாகிறது .

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!