ஞாயிறு, மே 11, 2014

இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

[நபியே] என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், ''[இதோ] நான் அருகிலேயே இருக்கிறேன்,, அழைப்பவர் , என்னை அழைக்கும்போது அவரது அழைப்பை நான் ஏற்கிறேன்'' [என்று கூறுவீராக] . ஆகவே , அவர்கள் என் அழைப்பை ஏற்கட்டும்,, என்னை நம்பட்டும். [இதன் மூலம்] அவர்கள் நேரிய வழியைப் பெறக்கூடும்.


ஒரு கிராமவாசி  [நபி [ஸல்] அவர்களிடம்] , ''அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இறைவன் அருகில் இருக்கிறானா? அல்லது தூரத்தில் இருக்கிறானா? அருகிலிருந்தால் மெதுவாகவே அவனிடம் நாங்கள் பிரார்த்திக்கலாம். தூரத்திலிருந்தால் சப்தமிட்டுப் பிரார்த்திக்க வேண்டும்'' என்று வினவினார். அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அப்போது தான் இந்த வசனத்தை அல்லாஹ்  அருளினான் .

இறைவன் எங்கே இருக்கிறான்?

ஹசன் அல்பஸ் ரீ  [ரஹ் ] அவர்கள் கூறியதாவது.. அல்லாஹ்வின் தூதர் [ஸல்]  அவர்களின் தோழர்கள் , ''எங்கள் இறைவன் எங்கே இருக்கிறான் ? என்று வினவினர் . அப்போதுதான் இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அதாஉ [ரஹ் ] அவர்கள் கூறியதாவது.. ''உங்கள் இறைவன் என்னிடம் வேண்டுங்கள்,, நான் உங்க [ளின் வேண்டுதல்க]ளுக்குப் பதிலளிப்பேன் என்று கூறினான் '' என்று    வசனம் [40..60] அருளப்பெற்றபோது, ''எந்த நேரத்தில் பிரார்த்தனை புரிய வேண்டும் என எங்களுக்குத் தெரிந்தால் நன்றாக இருக்குமே'' என்று மக்கள் கூறினர் . அப்போதுதான் மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது.

அபூமூஸா அல்அஷ் அரீ [ரலி] அவர்கள் கூறியதாவது.. நாங்கள் ஒரு போரில் [கைபரில்] அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களுடன் இருந்தோம் . அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும்போதும் ஒரு கணவாயில் இறங்கும்போதும் உரத்த குரலில்  'அல்லாஹூ அக்பர் ' [அல்லாஹ் மிகவும் பெரியவன்] என்று கூறிகொண்டிருந்தோம் .

அப்போது எங்களருகில் வந்த நபி [ஸல்] அவர்கள்,  ''மக்களே! உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் . [மென்மையாக மெதுவாகக் கூறுங்கள்] ஏனெனில் , நீங்கள் காது கேளாதவனையோ , இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுருபவனையும் [எல்லாரையும்] பார்ப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். உங்களில் ஒருவர் தமது வாகன ஒட்டகத்தின் கழுத்திற்கு எவ்வளவு  நெருக்கமாக உள்ளாரோ அதைவிட உங்களுக்கு நெருக்கமாக  , நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவன் இருக்கிறான்'' என்று கூறினார்கள் .

பின்னர் [என்னை நோக்கி ,] அப்துல்லாஹ் பின் கை ஸே ! சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு  வார்த்தையை உமக்கு நான் கற்றுக்கொடுக்கட்டுமா?  [அது]  '' லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' [எனது யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே  அன்றி வேறில்லை] எனபதுதான்'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''என்னை என்னுடைய அடியான் நினைவுகூர்ந்து, என் நினைவால் அவனுடைய உதடுகள் அசைந்துகொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்  அடியானுடன் இருக்கிறேன். என உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான். 

மற்ற வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.. அல்லாஹ் இறையச்சம் கொண்டோருடனும், நன்னடத்தை உடையோருடனும் இருக்கிறான். [16..128]

இறைதூதர் மூஸா மற்றும் ஹாரூன் [அலை] ஆகியோரிடம் அல்லாஹ் கூறினான்.. நான் உங்கள் இருவருடனும் இருக்கிறேன். [அனைத்தையும்] பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். [20.46]

இறைவனிடம் கையேந்துங்கள் 

ஆக , பிரார்த்தனை புரிகின்ற எவரது பிரார்த்தனையையும் அல்லாஹ்  வீணாக்கமாட்டான். மாறாக, அந்தப் பிரார்த்தனையை அவன் செவியுற்றுக்கொண்டிருக்கிறான்  ,, அதச் செவியேற்க விடாமல் எதுவும் அவனைத் தடுக்க இயலாது. இதன் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு ஆர்வமூட்ட்ப்படுகிறது  ,, அவனிடம் கேட்கப்படும் பிரார்த்தனை [துஆ] வீணாவதில்லை என உணர்த்தப்படுகிறது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ஓர் அடியார் அல்லாஹ்விடம் நல்லதைக் கோரி தம்மிரு கைகளையும் அவனை நோக்கி  விரித்துவைத்திருக்க , அவற்றை வெருங்கைகலாகத்  திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்.

மற்றொரு ஹதீஸில் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் ஒரு முஸ்லிம்  , குற்றமோ உறவு முறிவோ கலக்காத வகையில் பிரார்த்தனை புரிந்தால்  அதற்குப் பிரதியாக [பின்வரும்] மூன்று விஷயங்களில் ஒன்றை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. 

1.அவரது கோரிக்கையை அல்லாஹ் இவ்வுலகிலேயே நிறைவேற்றலாம்.2. அல்லது மறுமையில் வழங்குவதற்காக அதைச் சேகரித்து வைக்கலாம். 3. அல்லது  அவருக்கு நேரவிருந்த ஆபத்தை அதே அளவுக்கு அவரைவிட்டும் தடுக்கலாம். 

''அப்படியாயின் நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனைகள் புரிவோம்'' என்று நபித்தோழர்கள் அப்போது கூறினார்கள். அதற்கு நபி [ஸல்] அவர்கள் '' அல்லாஹ்  [அதைவிட] அதிகம் வழங்குபவன் ஆவான்.'' எனக் கூறினார்கள். 

வேறொரு ஹதீஸில் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. உள்ளங்கள் பாத்திரங்கள் [போன்று அவற்றில் உள்ளவற்றை பாதுகாப்பவை] ஆகும். அவற்றில் ஒன்று  மற்றொன்றைவிட மிகுந்த ஈடுபாடு காட்டக்கூடியதாகும். 

எனவே மக்களே! நீங்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தால் அது ஏற்கப்படும் என்று நம்பிக்கையுடன் [கவனத்தோடு] அவனிடம் கோருங்கள். ஏனெனில், அலட்சியமான உள்ளத்துடன் தன்னிடம்  பிரார்த்தனை புரியும் அடியானின் பிரார்த்தனைக்கு அல்லாஹ்  பதிலளிக்கமாட்டான்.

ஆதாரம் .. புகாரீ 

அல்லாஹ் மிக அறிந்தவன்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!