அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வெள்ளி, டிசம்பர் 05, 2014

படைத்தவனை வணங்கு! படைப்புகளை வணங்காதே !!

அல்லாஹ்வின் திருபெயரால்..........

தன்னளவில் அமைதி பெற்ற மனிதன்

தான் வாழும் சமூகத்தோடு  அமைதி பெற்ற மனிதன்

தன்னைப் படைத்த இறைவனோடு அமைதி பெறுவதன் மூலமே முழுமையான அமைதியைப் பெற முடியும்.

அமைதிக்கு வழிகாட்டிய இறைவனை மறந்துவிட்டு அமைதி அடைய முடியாது.

நம்மை அழகிய உருவில் படைத்து, சிந்திக்கும் ஆற்றலை வழங்கி, நமக்குப் பயன்படும்  விதத்தில் இயற்கையை அமைத்து வாழ்வாதாரங்கள் வழங்கி வரும் இறைவனை நினைவு கூறாமல் மனிதன் அமைதி அடைய முடியாது.


இறைவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, இறைவனுடன் அமைதி பெற முடியாது . இறைவனின் விருப்பம் நமது விருப்பமாகவும், இறைவனின் வெறுப்பு நமது வெறுப்பாகவும் ஆகாதவரை இறைவனுடன் அமைதி பெற முடியாது. இரண்டு நபர்களின் சிந்தனை , விருப்பு , வெறுப்பு , எதிர்பார்ப்பு ஒரே மாதரியாக அமைந்து விடும்போதுதான் , நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர். அதைப்போலவே நாமும் இறைநேசர்களாய் ஆக வேண்டுமெனில் இறைவனின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

முதலில் இறைவனை உள்ளது உள்ளவாறு உணர வேண்டும்.கூடுதல் குறைவின்றி , மிகைப்படுத்தலன்றி, கற்பனை கலவாமல் இறைவனை ஏற்க வேண்டும். இறைவனை பற்றி இறைவனை நமக்குச் செய்திகளை அறிவிக்கின்றான்.  '' நான் ஒருவன் எந்தப் தேவைகளும் அற்றவன் . நான் யாரையும் பெறவில்லை , யாராலும் பெறப்படவுமில்லை. எனக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. என்னை மிகைத்து  எந்தச் சக்தியும் இல்லை .''
[குர் ஆன்  அத் 112]

இறைவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். ஒரு நிறுவனத்திற்கு , ஒரு நாட்டிற்கு, ஓர்  இராணுவத்திற்கு இரண்டு தலைமை இருந்தால், குழப்பம் விளைவது போல் ஒரு பிரபஞ்ச்சத்திற்கு இரண்டு தலைமை இருந்தால் குழப்பமே மிஞ்சும்.

''வானத்திலும் , பூமியிலும் இறைவன் ஒருவனைத்தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால், அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்'' என்று திருமறை  கூறுகிறது.  [குர் ஆன் 21..22..23]

இந்தப் பிரபஞ்சம்  குழப்பமின்றி சீராகச் செயல்படுவதிலிருந்து இறைவன் ஒருவன் என்பது உறுதியாகிறது. எனவே இறைவன் ஒருவனே,, அவனுக்கு இணையில்லை,, துணையில்லை,, பால் இல்லை ,, பன்மையில்லை என்பது இறைவனுடன் அமைதி பெறுவதற்கான முதல் படியாகும்.

இறைவன் ஒருவன்  என்று ஏற்றுக் கொண்டபின், அவனை மட்டும் வணங்குவதே அவனுடன் அமைதி பெறுவதற்கான அடுத்த படியாகும்.  ''படைத்தவனை வணங்கு ,, படைப்புகளை வணங்காதே !,,  என்பது இறைக்கட்டளையாகும். படைத்தவனை விடுத்து அவனால் படைக்கப்பட்ட மனிதர்களை , உயிரனங்களை, உயிரற்ற பொருள்களை வணங்குவதும், அவற்றிடம் பிரார்த்தனை புரிவதும், அவற்றுக்காக நேர்ச்சை , காணிக்கை செய்வதும் இறைவனுக்கு வெறுப்பைத் தரும் செயல்களாகும் . எல்லாத் தேவைகளிலிருந்து விடுபட்ட, எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்ற  சக்தியே, வணங்குவதற்கு தகுதி படைத்தது. தமது தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல், பிறரைச் சார்ந்திருக்கும் படைப்புகளை வணங்குவது, படைத்தவனுக்கு செய்யும் அநீதியாகும். அறிவுக்கு புறம்பான செயலாகும்.

ஏக இறைவனை வணங்குவதோடு, அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது  தான் , இறைதிருப்தி முழுமையாகக் கிட்டும். ஒரு பொருளைக்  கண்டுபிடித்து அதனைத் தயார் செய்தவனே, அப்பொருலைஇயக்கும் முறையைச்  சொல்லித் தரமுடியும். மனிதனைப் படைத்து அவனுக்குப் புலன்களையும், ஆற்றல்களையும் வழங்கிய இஅரைவனெ மனிதனின் இயற்க்கை பலம்  , பலவீனம் ஆகியவற்றைத் துல்லியமாக அறிவான். எனவே அவன் வகுத்தளிக்கும் கோட்பாடுகள், நெறிமுறைகள் எல்லாக் காலத்திற்கும், எல்லாச் சமூகங்களுக்கும் ஏற்றவையாக அமைந்திருக்கும். இன மொழி, நாடு வர்க்கம், பால்மாச்சியங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

''இறைவன் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும் கட்டளை பிறப்பிக்கும் ஆற்றலும் அவனுகுரியவையே.''
[குர் ஆன் ..4..26,7..54]

''இறைவன் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகிறான். ஆகவே சத்தியத்தின் பக்கம்  வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா - அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி, தானாக நேர்வழியைப் பெற முடியாதவன் பின்பற்றத்தகுந்தவனா? ''         [10..55] என்ற இறை வாக்குகள் படைத்தவனுக்கு வழிகாட்டும் ஆற்றல் உண்டு என்பதை உணர்த்துகின்றன.

இறைவனை வணங்கி, அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதோடு , அவனை அடிக்கடி நினைவுக்கூற வேண்டும். இறைவனின் பண்புகள், வல்லமை, ஆற்றல்கள், அருளிய அருட்கொடைகள் ஆகியவற்றை  அடிக்கடி நினைவுக்கூர்ந்து அவனைப் பெருமைபடுத்தியும் புகழ்ந்தும் நன்றி தெரிவித்தும் வர வேண்டும்.

''இறைவனை நினைவுக் கூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன''
[13..28]

நம்மை அழகிய உருவில் படைத்து, படைப்புகளில் சிறந்தவர்களாய் ஆக்கி, ஆற்றல்களையும் வாழ்வாதாரங்களையும் வழங்கிய இறைவனை நினைவுக் கூறுவதால் உள்ளம்  அமைதி பெரும்.

இறைவன் மிகப் பெரியவன் என்றால் , இறைவனுக்கு முன் நான் ஒன்றுமில்லை என்ற பொருள், இதனைப் புரிந்து கொண்டவர்கள் ஆணவத்திலிருந்து விடுபட்டு அமைதிப் பெறுவார்கள்.

''இறைவனுக்கே எல்லாப் புகழும்'' எனபது எல்லாச் சிறப்புக்கும் சொந்தக்காரன் இறைவனே. என்னிடமுள்ள அறிவு, செல்வம், வீரம், அனைத்தையும் வழங்கியவன் அவனே. இதனைப் புரிந்துக் கொண்டால், ஆணவம், பொறாமை, பெருமை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று அமைதி பெறுவர் .

எனவே இறைவனை நினைவு கூர்வதால் நம் வாழ்விலும் அமைதி பெறலாம், இறைவனோடும் அமைதி பெறலாம்.

இறைவன் ஒருவன்தான் என்பதில் உறுதியாயிருங்கள்!

படைத்தவனை மட்டும் வணங்குங்கள். படைப்புகளை வணங்காதீர்கள்!

இறைவனை வணங்குவதோடு இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படியுங்கள்!

இறைவன் பண்புகளை, ஆற்றல்களை, வல்லமைகளை நினைவுக் கூர்ந்து வாருங்கள்!

இறைவனுக்கு அடிக்கடி நன்றி செலுத்துங்கள்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. Dr v .s . ஹபீப் முஹம்மத்
நன்றி..நர்கிஸ்
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!