அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஜனவரி 31, 2015

அதிகமாக குர்ஆன் ஓதுவார்

அல்லாஹ்வின் திருபெயரால் .................

குரான் ஓதுவதின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .......!!!
அந்த குரான் நமக்காக மறுமையில் சிபாரிசு செய்கிறது .  இன்றையக் காலத்தில் நாம் குரானை எப்படி பாவிக்கிறோம் என்பதிப் பார்க்க வேண்டும். சில விடயங்களை  சொல்லி ஆக வேண்டும்.   இந்த குரானை சிலர் பயன்படுத்தும் விதம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், கூற வேண்டும். உயிருள்ளவர்களுக்காக இந்த குரான் இரக்கப்பட்டுள்ளது என்பதை சிலர் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு புரியவைக்க  வேண்டும்.


பெரும்பாலும் மக்கள்கள் இந்த காரியத்தை வழக்கமாக செய்து வருகிறார்கள் ..
யாரவது ஒருவர் மரணித்துவிட்டால் , உடனே அந்த நேரத்தில் செய்யக் கூடிய விடயம் என்னவென்றால் . அந்த மையத்துக்காக குரானை எடுத்து மாறி மாறி ஓதுவார்கள் . அன்றையைப் பொழுதில் முழு குரானை ஓதி முடித்துவிடுவார்கள்.  இறந்தவர்களுக்காக குரானை ஓதலாம ? கூடுமா ? கூடாதா ? என்ற விடயத்துக்கு நாங்கள் வரவில்லை . குரான் இரக்கப்பட்டது உயிருள்ளவர்களுக்கு தான் என்பது எந்த சதேகமும் இல்லை . குரான் என்பது சடங்குக்காக செய்வது அல்ல . மரணித்தவர்களுக்காக ஓதுவது அல்ல . குரான் என்பது ஒரு வாழ்க்கை ! வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கக் கூடிய இந்த குரானை , தவறாக பாவிக்கக் கூடாது . அண்ணல் நபி [ஸல்] அவர்களின் காலத்தில் ,  இந்த பழக்கம் இருந்ததில்லை . எந்த சகாபாக்களும் செய்ததில்லை . நபிகள் நாயகம் [ஸல்] அவர்களும் காட்டி தரவில்லை. இதை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குரான் தினம்தோறும் ஓத வேண்டும் ! பொருள் விளங்கி ஓத வேண்டும்!

அல்ஹம்துலில்லாஹ்!!!
ஈமான் என்ற இந்த உயரிய அந்தஸ்தை அடைவதற்காக முஸ்லிம் பரிசுத்த திருக்குர்ஆனின் நிழலில் இளைப்பாருவதை வழமையாக்கி,நேர்வழியின் தென்றலை சுவாசித்து நன்மையின் உச்சத்தை அடைவார் . அதன் வசனங்களை இறையச்சத்துடன் இரவு பகலில் அதிகமதிகம் ஓதி அவைகளை ஆழ்ந்து சிந்திப்பார். அதற்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவார் . தனது இரட்சகனுடன் உரையாடி, அவனின் வேத கருத்துக்களை ஏற்று, இதயத்தை பரிசுத்தப்படுத்தி கொண்டு தனது ஈமானையும் மன நிம்மதியையும் அறிவாற்றலையும் அதிகரித்துக் கொள்வார்.

அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூறுவதால் [உண்மை விசுவாசிகளின்] இதயங்கள் நிச்சயமாக நிம்மதியடையும் என்பதை [நபியே ! நீர்] அறிந்து கொள்ளும் .                               [அல்குர் ஆன் 13..28]

இறையச்சமுள்ள முஸ்லிம் , நபி [ஸல்] அவர்கள் கற்றுத்தந்த அழகிய முறையில்  குர் ஆனை அணுக வேண்டும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  ''திருக்குர் ஆனை ஓதுகின்ற முஃமினின் நிலை  ஆரஞ்சுப் பழத்தைப் போன்றதாகும் . அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. [மற்ற நற்செயல்கள் புரிந்துக் கொண்டு] குர் ஆன் ஓதாத முஃமின் பேரீச்சம் பழத்தைப்  போன்றவராவார். அதன் சுவை நன்று. [ஆனால்] அதற்கு வாசனை கிடையாது.  நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்ஆனையும்  ஓதி வருகிறவனின் நிலையானது துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது.அதன் வாசனை நன்று. சுவையோ கசப்பு . நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவனின் நிலையானது குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு. அதற்க்கு வாசனை கிடையாது.'' ஆதாரம் .. புகாரி ]

நபி [ஸல்] அவர்கள் அருளினார்கள் .. '' நீங்கள் குர்ஆனை  [அதிகமதிகம்] ஓதுங்கள் . அது அதை ஓதியோருக்கு மறுமை நாளில் சிபாரிசு செய்யும் .
ஆதாரம்.. முஸ்லிம்]

மேலும், கூறினார்கள் .. ''குர் ஆனை நன்கறிந்து ஓதுபவர் மறுமை நாளில் மிக கண்ணியமான நநல்லோர்களுடன் இருப்பார். குர்ஆனை ஓதும்போது சிரமத்துடன் திக்கித் திக்கி  ஓதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.''
ஆதாரம்.. புகாரி.முஸ்லிம்]

இதற்குப் பிறகும் ஓர் உண்மையான முஸ்லிம் திருக்குர்ஆனை ஓதி அதன் கருத்துகளைச் சிந்திப்பதிலிருந்து அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்ன?
ஆழ்ந்த  இறைநம்பிக்கை, நிரந்தரமான நற்செயல்கள், எப்போதும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்நோக்கல், அல்லாஹ்விடம் தனது அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்துதல் ஆகியவையே ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுடன் கொள்ளவேண்டிய தொடர்பாகும்.

[எனக்கு வழிப்பட்டு என்னை] வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை.  [அல்குர் ஆன் 52-56]
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!