செவ்வாய், பிப்ரவரி 03, 2015

அமைதியாக இருந்தால் அமைதி வருமா?

அல்லாஹ்வின் திருபெயரால் .......

''தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மௌனமாக இருப்பதே ஆகும் ' எட்மண்ட் பர்க்

''உண்மையை அறிந்த பின்னரும் , உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள் '' மார்டின் லூதர் கிங்

இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன . ஆனால் , இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால், அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ , மற்றவர்கள் தங்களுக்காக குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் . பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே , பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராக பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் , அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுபினால்தான் , நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதைச் சமூகம் மறந்துவிடக் கூடாது.


'அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை ' என இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்களை மட்டுமின்றி , உலக மாந்தர் அனைவரையும் அழிவிலிருந்து , அநீதியிளிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட ஆணையாகும் .

''முஸ்லிம்களே! மனித இனத்தைச் சீற்படுத்துவதர்காகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமுதாயத்தினராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள் . தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்.''
குர் ஆன் 3..110]

''நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும்.  அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும் . தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகின்றார்களோ , உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர் .
[குர் ஆன்.3.104]

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நன்மையை ஏவி , தீமையை விலக்கும் சமுதாயமே  என்றும் , வெற்றி பெற்ற சமுதாயம் என்றும் நமக்கு உணர்த்துகின்றன.

அநீதிகளுக்கு எதிராக  நம்மால் முடிந்த அளவுக்கு போராட வேண்டும்.
''தீமையைக் கண்டால் கைகளால் தடு ! அது முடியாது போது நாவினால் தடு! அதுவும் முடியாதுபோது மனத்தளவில்  தடு! ஆனால் அதுவோ இறைநம்பிக்கையின் தாழ்நிலையாகும் ' என்றார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள். எனவே அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளைக் களைவதில் அக்கறைக் கொள்ள வேண்டும்.  அதிகாரத்தில் இருப்போர் தமது பதவியைப் பயன்ப்படுத்தி அநீதிகளை ஒழிக்க வேண்டும்.  சட்டம், நீதித்துறை , இராணுவம் , காவல்துறை ஆகியவற்றின் உதவியோடு அநீதிகளைக் களைய வேண்டும்.

பொதுமக்கள் , அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மனித நேயர்கள் , மனித உரிமை இயக்கத்தினர் ஆகியோர் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.  'கொடுங்கோல் ஆட்சியாளர்க்கு முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் [ஜிஹாத்] ஆகும்' என்றார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள்.

அநீதிக்கு எதிராக மக்கள்  எழுப்பும் குரல், ஆதிக்க சக்திகளைக் கலக்கமடையச் செய்யும் சக்தி படைத்தது.  எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு அநீதிக்கு எதிராக  , தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில், ஒரு சிறிய எண்ணிக்கையினர் குரல் எழுப்புவதால் என்ன பயன் என்று கருதிவிடக் கூடாது.  ஜாதி , மதம் மொழி , இனம் பாராது அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தீயவர்கள் தீமை புரிவதர்காக் கூட்டணி அமைத்துக் கொள்ளும்போது, நன்மைக்காக நல்லவர்கள் ஒன்று சேரத் தயங்குவதேன்?

இன்று  இந்தியாவில் நடக்கும் ஆட்சி பிஜேபி . தீயவர்களின் ஆட்சி என்று தான் சொல்ல வேண்டும்.  இவர்களின் ஆட்சியில் மத கலவரம் , வன்முறை , கட்டாய மத மாற்றம்  , இஸ்லாமியர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் அநீதிகளும் , தொல்லைகளும்  கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . இன்ஷாஅல்லாஹ்  விரைவில் இந்த அநீதிக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கத்தான் போகிறது.  எதற்கும் ஒரு அளவு உண்டு .எல்லை உண்டு. இந்த ஆட்சியின் உண்மையான முகம் ஒரு நாள் வெளுக்கத்தான் போகிறது. அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை. இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்  , பிளவுப்பட்டு இருக்கும் நாம் இன்ஷாஅல்லாஹ்  நாம் அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும் . கூடி இருந்தால் கோடி நன்மை!  அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும். இன்ஷாஅல்லாஹ்  ஒன்றுகூடுவோமா???
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!