திங்கள், நவம்பர் 16, 2015

நான்தான்! நான்தான் !!

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
அன்பான சகோதர/ சகோதரிகளுக்கு  அஸ்ஸலாமு அழைக்கும் !

மனித குலத்திற்கு எக்காலத்திற்கும் ஏற்றவகையில் பல நல்ல ஒழுக்க நெறியினை இறைவன் தம் அருள் மறையின் மூலமாகவும், அண்ணல் நபி [ஸல்] அவர்களது வாழ்க்கை முறைகளின் வாயிலாகவும் வகுத்துத் தந்துள்ளான். மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க கூடிய ஆற்றலையும் தந்திருக்கிறான். அத்தகைய நன்னெறிகளை, பிறர் இல்லம் செல்லும் பொழுது   பேண வேண்டிய வழிமுறையினை - ஒழுக்கத்தினை , இம்மடலில் உங்களுக்குத் தருகிறேன் . சாதாரணமாக பிறர் இல்லத்தினுள் செல்லும் போது சிலர் ''சர சர '' வென்று , தமது வருகையினை அறிவிப்புச் செய்யாது நுழைந்து விட்டு பின்பு வருத்தபடுவதுண்டு . வீட்டின் உரிமையாளர்களும் '' என்ன இது கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாதர்வர்களாய் இருக்கிறார்களே '' என வெளியே வாய்விட்டு சொல்லாவிட்டாலும், மனதிலாவது நினைத்துக் கொள்வார்கள். இத்தகைய பழக்கத்தை இஸ்லாம் அன்றே கண்டித்துள்ளது.


ஒரு முறை அண்ணலார் அவர்கள்  [தமது] இல்லத்தில் இருக்கும் பொழுது அமீர் உடைய சந்ததியாலரில் ஒருவர் வந்து, உள்ளே வர அனுமதி கோரி , ''நான் உள்ளே வரட்டுமா ? என்று கேட்டார். அதற்கு அவர்கள் தம் பணியாளரிடம் , '' அவரிடம் சென்று அனுமதி பெரும் முறையை அவருக்குக் கற்றுக் கொடுத்து [அதாவது முதலில்] '' அஸ்ஸலாமு அழைக்கும் '' என்று கூறுமாறும் , பின்னர் , தான் உள்ளே வர அனுமதி உண்டா'' என்று கேட்குமாறும் அவரிடம் கூறும்'' என்றனர் . இதனைக் கேள்வியுற்ற  அவர், '' அஸ்ஸலாமு அழைக்கும் , நான் உள்ளே வர அனுமதி உண்டா?  என்று வினவினார் . [அது கேட்ட ] அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார் . பின்னர் அவர்  உள்ளே வந்தார். இது தான் இஸ்லாம் காட்டிய உயர் பணிவு ! நமது வீட்டினர் செல்வதேயாயினும் சலாம் சொல்லி விட்டுத்தான்  நுழைய வேண்டும் என மார்க்கம் கூறுகிறது . யாரும் இல்லாத வீட்டில் சலாம் சொல்வது என்றால் , '' அலைனா வஅலா இபாதில்லா ஹிஸ் சாலிஹீன் '' என்று சொல்ல வேண்டும் இவாறு சொன்னால் பேய் பிசாசுகளின்  தொல்லையை விட்டுப் பாதுகாப்பக் கிடைக்கும் .

கதவை தட்டும் பொழுது வீட்டினுள் இருப்பவர்  ''யார் ?'' என்று கேட்டால் , '' நான்தான்- நான்தான் '' என்று சொல்வதை கேட்டிருப்பாய் ! ஏன் பெயரினை சொன்னால் என்னவாம் ? இப்படியொரு பழக்கம் . இது தொடர்ப்பான ஒரு சம்பவத்தை  சொல்கிறேன் கேளுங்கள் ! ஜாபிர் [ரலி] அவர்கள் சொல்கிறார்கள்..  ''நான் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் இல்லம் சென்று கதவைத் தட்டினேன் . அப்பொழுது அவர்கள் '' யார் அது? என வினவினார் . ''நான்தான்'' என்றேன் உடனே அவர்கள்  '' நான்தான் '' [என்றால் என்ன பொருள்]  என்று கூறிக் கொண்டு வெளியில் வந்தனர். கதவைத் தட்டும் பொழுதே , பெயரையும் சொல்லி அழைப்பது எத்தனை ஏற்புடையது என்று பார்த்தாயா ?

சிலருக்கு ஒரு பழக்கம் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பது , வீட்டில் உள்ளவர்கள் கதவைத் திறப்பதற்கு சற்றே தாமதம் ஆனா போதிலும் சாவி துவாரம் வழியாக பார்ப்பது , பட படவென்று கதவை மீண்டும் தட்டுவது- இப்படியாக நசாயில் மற்றொரு அறிவிப்பில் ஒரு சுவையான சம்பவம் . ஒரு காட்டரபி அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாயிலருகே வந்து கதவிடுக்கின் வழியாகப் கண்ணை வைத்துப் பார்க்கத் துவங்கினார். இதனை நபி [ஸல்] அவர்கள் கண்டு கொண்டனர் . உடனே காய்ந்த ஒரு பேரீச்ச மராத்தி கிளையையோ  அல்லது வேறு எதோ ஒரு குச்சியையோ எடுத்து அவருடைய கண்ணுக்கு நேராகக் குத்தும் பொருட்டுச் சென்றனர். இதற்குள் அவர் நகர்ந்து விட்டார். அப்பொழுது அண்ணலார் அவரிடம் , நீர் [அதே இடத்தில்] இருந்திருப்பின் , உமது கண்ணைக் குத்தியிருப்பேன் என்று சொன்னார். இன்னும் சிலரிடம் இது போன்ற அநாகரீகமான பழக்கம் இருந்து தான் வருகிறது. ''கஸ்து '' என்சற அமலில் , நம் சகோதரர்கள் அழைக்கச் செல்லும்போது  , அவர்கள் வீட்டின் முன்பாக தலையைத் தாழ்த்தி வாசல் ஓரமாக நின்று அழைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்பினை இஸ்லாம் நமக்கு சொல்லி தருகிறது. அண்ணல் நபி [ஸல்] அவர்கள் எவர் வந்த போதிலும் , அவ்வீட்டின் தலை வாயிலுக்கு நேராக வந்து நிற்க மாட்டார்கள். அதன் வலது பக்கம் அல்லது இடது பக்கம் வந்து நின்று , '' அஸ்ஸலாமு அழைக்கும் '' என்று கூறுவார்கள். பிறர் இல்லம் சென்றால் , அவர்களுக்கு நமது வருகையினை எப்படி உணர்த்த வேண்டும் என்பதையும் , ஆவலுடன் நம் வரவினை ஏற்பதினையும் அழகிய முன் மாதரியாக இஸ்லாம் வழங்கியிருப்பதை உங்களுக்கு உணர்த்தி விட்டோம் .
நன்றி நர்கிஸ் .     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!