அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், ஏப்ரல் 14, 2016

சிந்தனைக்குச் சில வரிகள்............

சிந்தனைக்குச் சில வரிகள்............
அல்லாஹ்வின் திருபெயரால்.......
இஸ்லாம் என்பது மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் வாழ்க்கை நெறி!
இஸ்லாம் கூறுவது மனிதன் இப்படித்தான் வாழவேண்டும்! எப்படியும் வாழலாம் என்று சொல்வது மற்ற மதங்கள்.. சிந்தனைச் செய்ய மனமே! மறுமையில்  உன்னை நீயே நிந்திக்காமல் இருக்க ! சோதனைகளை சாதனையாக மாற்ற அல்லாஹ்விடம் உதவி கோரும்! உன் உள்ளத்தில் இருப்பத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்  நிச்சயமாக அறிந்தவன் எனபதை மறந்துவிடாதே! செய்த பாவத்தை மறைத்து விடலாம் என்று எண்ணிவிடாதே! அல்லாஹ்  அனைத்தையும் அறிந்தவன், அவன் எப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று  அச்சத்துடன்  நீர் இரு!


காசு செல்லாது ...
ஒரு நாளன்று ஒரு பெரியார் ஒரு கடைக்குச் சென்று தமக்குத் தேவையான பொருளை வாங்கிக் கொண்டு கடைக்காரிடம் பணத்தைக் கொடுத்து மீதிப் பணத்தைக் கேட்டார்கள். அக்கடையின் உரிமையாளர் அப்பெரியாரிடமிருந்து அப்பணத்தை வாங்கிப் பார்த்து விட்டு  ''பெரியவரே! இந்தப் பணம் செல்லாது. எனவே வேறு பணம் தாருங்கள்'' என்று கேட்டார். இதை கேட்ட பெரியார் திடுக்கமடைந்து மயங்கிக் கீழே சாய்ந்துவிட்டார். இதைக் கேள்வியுற்ற மக்கள் அக்கடைக்கு முன்கூடி விட்டனர். அக்கடை உரிமையாளரிடம்,  ''இந்தப் பெரியார் அவர்களை என்ன செய்தீர்?'' எனக் கேட்டபோது கடைக்காரர் நடந்த விஷயங்களைக் கூறினார். சிறிது நேரம் சென்றபின் அப்பெரியார் அவர்கள் எழுந்து அமர்ந்தார்கள். ''பெரியார் அவர்களே! இந்தக் காசு செல்லாது என்று சொன்னதற்காக இவ்வளவு கவலையடைந்துள்ளீர்களே , என்ன காரணம்? பின்னர்  வேண்டுமானால் வேறு பணம் கொடுத்துக் கொள்ளலாமே'' என அம்மக்கள் கேட்டனர். அதற்கு அப்பெரியார் அவர்கள் ''இந்தப் பணம் செல்லாது என்று சொன்னதற்காக நான்  இந்நிலையை அடையவில்லை. இந்தப் பணம் செல்லும் என்று எண்ணிக்கொண்டு கடைக்காரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு செல்லாது என்று சொன்னபோது எனக்கு மறுமையின் நிலை பற்றிய நினைவு வந்துவிட்டது. கடைக்காரர் செல்லாது என  பணத்தை என்னிடம் திருப்பித் தந்தது போல் நான் செய்யக் கூடிய அமல்களை  ''செல்லாது என்று அல்லாஹ்  மறுத்து விட்டால் நான் என்ன செய்ய முடியும்?  என்பதை நினைத்து தான் கவலையடைந்தேன்'' என்று மிக்க வேதனையோடு அங்கு குழுமியிருந்த மக்களிடம் கூறினார்கள்.

நாம் இந்த உலக காரியத்துக்காக  ஒருமுறை பலமுறை சிந்தித்து பலபேரிடம் ஆலோசனை கேட்டு  சில காரியங்களைச் செய்கின்றோம். அப்படி செய்தும் நமக்கு சில சந்தேகங்கள்   கவலைகள் தப்பாக நடந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சம்! இந்த உலகத்தில் நாம் நிரந்தரமாக தங்கபோவதில்லை. சிறிது காலம் தான் நம் வாழ்க்கை . அந்த சொற்ப கால வாழ்க்கைக்கே நாம் எவ்வளவு முயற்சியும் சிந்தனைகளும்  செய்து வருகிறோம்... நிரந்தரமான வாழ்க்கைக்காக ஒரு சுகபோக வாழ்க்கைக்கான எந்த முயற்சியும், சிந்தனையும் இல்லாமல் இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது! நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா என்பதை நாம் ஒரு நாள் கூட நினைத்து பார்த்தோமா? நம்முடைய அமல்கள் இக்லாஸ் [அல்லாஹ்வுக்காக] இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்தோமா? இப்பொழுதே உங்கள் மனதை கேட்டுப் பாருங்கள்! நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்துப் கொள்ளுங்கள்  ...
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!