புதன், மே 11, 2016

நல்ல மனிதர்களின் அடையாளங்கள்....

நல்ல மனிதர்களின் அடையாளங்கள்....
அல்லாஹ்வின் திருபெயரால் ....
1.இவ்வுலகத்தின் மீதுள்ள பிரியத்தையும் பாசத்தையும் குறைத்து மறு உலக வாழ்க்கையின் மீது பிரியம் வைத்தல் .

2.நற்கிரியைகளை அதிகமாக செய்தல், குர்ஆன் ஷரீபை பிரியத்துடன் ஓதுதல், அதிகமாக திக்ரு செய்தல், மற்று முண்டான நல்ல அமல்களின் பக்கம் கவனம் செலுத்துதல்.

3.ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத்தில் பய பக்தியுடனும் பேணுதலுடன் தொழுது வருவதோடு மற்றுமுண்டான சுன்னத்தான , நபிலான தொழுகைகளையும் நிறைவேற்றுதல்.


4.நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வாழ்க்கை முறையை எல்லா காரியங்களிலும் பின்பற்றுதல், திருமணம், வியாபாரம், விவசாயம், உத்தியோகம், உணவு அருந்துதல், பானங்கள் குடித்தல், மலம்ஜலம்  கழித்தல், தூக்கம் இன்னும் காலையில் தூக்கத்திலிருந்து எழும்பினது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை சுன்னத்தான வழியை பின்பற்றுதல்.

5.மார்க்க அறிஞர்கள் , தீனுக்காக சேவை செய்யக்கூடிய பெரியோர்களின் சபைகளில் அமர்ந்து தீனுடைய அறிவைப் பெறுதல். மேலும் தா ஃலீமுடைய சபைகளில் அமர்ந்து தீனுடைய விளக்கங்களை அறிய ஆசை கொள்ளுதல்.

6.ஹராமான [மார்க்கத்தில் விலக்கப்பட்ட ] பொருள்களை சந்தேகத்திற்கிடமான பொருள்களையும் உண்ணாமலும் உபயோகம் செயயாமலுமிருத்தல் .

7.அவசியமில்லாத காரியங்களை விட்டும் ஒதுங்கி இருத்தல்.

8. தேவையான அளவு மட்டும் வார்த்தையாடுதல் [சம்பாஷித்தல்- பேசுதல்]

9.ஏழைகள், இயலாதவர்கள் மீது அன்பு கொள்ளுதல் மற்றும் எல்லாப் படைப்பினங்கள் மீதும் இரக்கமுள்ளவராக இருத்தல்.

10.அதிகமாக மரணத்தையும், கப்ருடைய வாழ்க்கையும் நினைத்தால்.

11.மார்க்க அறிஞ்சர்கள் அவர்களுக்கு சங்கை செய்தல், பெரியோர்களுக்கு மரியாதை செய்தல், சிரியவர்மீது அன்பு கொள்ளுதல்.

12. யார் யாருக்கு என்ன என்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அவைகளை சரியான முறையில் செய்தல். [தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதர, சகோதரிகள், அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்]

13.தீமை செய்தோரை மன்னித்து நேசனாக ஆக்கிக் கொள்வதுடன் அவர்களுக்கு உதவியும் உபகாரமும் செய்தல்.

14தன்னால் இயன்ற வரை தர்மம் செய்தலும் மற்றும் மார்க்க சம்பந்தமான காரியங்களுக்கு பொருளுதவி செய்தல்.

15.எந்த காரியம் செய்தாலும் பெருமைக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இல்லாமல் அல்லாஹ்வினுடைய பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளுதல்.

16.நன்மையான காரியங்களை ஏவிக் கொண்டும், தீமையான காரியங்களை விட்டு விலகிக் கொண்டும் இருத்தல்.

17.இலாபம் வந்தால் சந்தோஷப்படாமலிருத்தல் , நஷ்டம் வந்தால் கவலைப்படாமலிருத்தல் .

18.எல்லாத் தேவைகளைக் குறித்தும் அல்ல்ஹூதாஆலா விடமே பிரார்த்தனை செய்து கொண்டே இருத்தல்.

19.சோதனைகள் வரும்போது பொறுமையுடன் சகித்துக் கொள்ளுதல்.

20.எல்லா நிலைமைகளிலும் பயபக்தியோடிருத்தல்..******************
அல்லாஹ்  மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!