அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

அந்த இளைஞனின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளித்திரிய  வேண்டிய வயதில் , பட்டாம் பூச்சியாய் பாடித் திரிந்து மகிழ வேண்டிய பருவத்தில் இதென்ன துயரம்?  இளமையின் வசீகரத்தால் ஒளிரவேண்டிய அழகு முகத்தில் ஏன் கவலைக் கோடுகள்?

பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் தாளவில்லை . அந்த இளைஞனை அன்புடன்  அழைத்தார்  .   ''தம்பி , ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? இளமைக்குரிய  துள்ளலோ , உற்சாகமோ உன்னிடத்தில் காணப்படவில்லையே  ! ஏதேனும் கவலைகளா ?
பெரியவரின் அன்பான மொழி கேட்ட மறுவினாடியே அந்த இளைஞன் அழுது விடுவான் போலிருந்தது , அவனுடைய கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்பினான். சற்றுநேரம் கழித்து அவனே பேசத் தொடங்கினான்.


''ஐயா ! , எனக்கு தந்தை இல்லை, நான் சிறுவனாக இருந்தபோதே அவர் மரணம் அடைந்துவிட்டார். நான்தான் மூத்தவன் . குடும்பப் பொறுப்புகள் முழுதும் ஏன் தோழில் ...! என் வாப்பா வாங்கிய கடனே ஏராளமாய் இருக்கிறது . எனக்குச் சரியான வேலை வாய்ப்பு இல்லை. நான் எப்படிபை ஐயா மகிழ்ச்சியாக இருக்கமுடியும் ?

பெரியவர் புன்னகை பூத்தார்..
''தம்பி, துயரங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் உண்டு. அவற்றை கண்டு சோர்ந்துவிடக்கூடாது . ஐவேளை தொழும் வழக்கம் உனக்கு உண்டா?

''ஆமாம் ஐயா ! தொழுகையை மட்டும் விடவே மாட்டேன்.
''நல்லது, உன்னைப் போலவே துயரத்தில் இருந்த ஒரு நபித்தோழருக்கு அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனையை நான் உனக்குச் சொல்லித் தரட்டுமா ..?
சொல்லுங்கள் ஐயா ..!
'' இறைவனே ! துக்கத்திலிருந்து , கவலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக . ஆதரவற்ற நிலையிலிருந்தும் சோம்பலிருந்தும் , கஞ்சத்தனத்திலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக . கடன் சுமையிலிருந்தும் பிறர் என் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக !

இந்த பிரார்த்தனையை ஓதினால் பலன் கிடைக்குமா? ஐயா "  ''நிச்சயமாக இன்ஷாஅல்லாஹ் ...!
காலையிலும் , மாலையிலும் தொழுகைக்கு பிறகு இதை விடாமல் ஓதிக் கொண்டிரு , நபிகளார் சொன்னபடி இதை ஓதி வந்த நபித்தோழர் கொஞ்ச நாள்களிலேயே துயரங்களில் இருந்தும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டதாக அவரே சொல்லியுள்ளார் .
இதை மட்டும் ஓதினால் போதுமா?  நன்றாக கேட்டாய். இறைவன் மீது பாரத்தைப் போட்டு நீ செய்ய வேண்டிய முயற்சிகள்  அனைத்தையும் செய்ய வேண்டும். கூடவே இந்த பிரார்த்தனையும் ஓதிவரவேண்டும் . நிச்சயமாக இன்ஷாஅல்லாஹ் நல்ல பலன் விளையும் இது அனுபவபூர்வ உண்மை!

''நன்றி ஐயா! என்று கூறியபடியே  இளைஞன் பெரியவரிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவனுடைய தம்பி ஓடிவந்தான் . ''அண்ணா அண்ணா ! நீ இண்டர்வியூக்கு  போயிருந்த கம்பெனியில் உனக்கு வேலை கிடைத்து விட்டது. இதோ கடிதம் வந்திருக்கு.

பெரியவர் புன்னகையுடன் அவனைப் பார்த்தார் . அந்த இளைஞனின் கண்களிருந்து ஆனந்தக் கண்ணீர் . அவனுடைய இதயம் இறைவனுக்கு நன்றி சொல்லியது.

நபிகளாரின் அந்தப் பிரார்த்தனையை நாமும் ஓதிவருவமே !!!
நன்றி.. சமரசம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!