அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

செவ்வாய், அக்டோபர் 02, 2018

தொழுகையில் சுத்ரா கடமையா?

தொழுகையில் சுத்ரா கடமையா?

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
தொழுகையில் சுத்ரா கடமையா?
பதில் :
ஆம். தொழுகையில் சுத்ரா வைப்பது கடமையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுத்ரா இல்லாமல் தொழுவதைத் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
لا تصلوا إلا إلى سترة - رواه ابن خزيمة والحاكم والبيهقي
நீங்கள் சுத்ராவை நோக்கியே தவிர தொழ வேண்டாம்.
(இப்னு ஹுஸைமா, ஹாகிம், பைஹகி)

இந்த ஹதீஸ், சுத்ரா இல்லாமல் தொழ வேண்டாம் என்பதை வலியுருத்திக் கூறுவதன் அடிப்படையில் சுத்ரா வைத்துத் தொழுவது கடமையாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகையில், சுத்ராவுக்கு நெருக்கமாக நிற்பார்கள். நபிகளாருக்கும், அவரது சுத்ராவுக்கும் இடையில் மூன்று முழம் அளவுக்கு இடைவெளி இருக்கும். அன்னார் சுஜுது செய்யும் இடத்துக்கும், சுத்ராவுக்கும் இடையில் ஒரு ஆடு செல்லும் அளவுக்கு இடைவெளி இருக்கும்.
(முஸ்னத் அஹ்மத், நஸாஈ, புஹாரி, முஸ்லிம், பைஹகி, அபூ தாவூத்)

மேலும் பின்வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
لا تصلوا إلا إلى سترة ، ولا تدع أحدا يمر بين يديك ، فإن أبى فقاتله ، فإن معه القرين
நீங்கள் சுத்ராவை நோக்கியே தவிர தொழ வேண்டாம். எவரும் உங்களைத் தாண்டிச் செல்வதற்கு விட வேண்டாம். (அதாவது, சுத்ராவுக்கும் உங்களுக்கும் இடையில் தாண்டிச் செல்ல விட வேண்டாம்). அவ்வாறு தாண்டிச் செல்பவரோடு நீங்கள் போராடுங்கள். ஏனென்றால் அவருடன் (ஷைத்தான் தோழராக) அமைந்திருக்கிறான்.
(இப்னு ஹுஸைமா)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு விடயத்தை செய்யுமாறு ஏவினால், அதனைச் செய்வது கடமை என்பதாகும்.
உஸுலுல் பிக்ஹில் உள்ள ஓர் அடிப்படைக்கு இணங்க
'ஒரு ஏவல் வந்துவிட்டால் அது கடமை என்ற நிலையை பரிபூரணமாக்கிவடும், அதனை இரத்துச் செய்யும் மற்றுமொரு அறிவிப்பு வராத பட்சத்தில்!'
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஏவல் வந்ததன் பின்னால், அதனை ரத்துச் செய்வதற்கு அல் குர்ஆனிலோ, சுன்னாவிலோ மற்றுமொரு அறிவிப்பு வர வேண்டும். அதுவரை, ஏவல் என்பது கடமையாக நிலைநாட்டப்படும்.
எனவே நபிகளாரின் ஏவலின் அடிப்படையில், தொழுகையில் சுத்ரா வைப்பது கடமையாகும்.
(இது பற்றி விரிவாகக் காண்பதற்கு - ஷெய்க் நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் - ஸபதுஸ் ஸலாத் அந் நபி - என்ற நூலைப் பார்க்கலாம்)
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!