கல்வி என்பது முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் எனபதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கு கட்டாயக் கடமையாகும். (ஸுனன் இப்னு மாஜா )
கல்வி இல்லாத காரணத்தினால்தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு , மார்க்கத்தில் இல்லாத சொல்லாத காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை கல்வியைத் தேடவேண்டும்.
கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம் . அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான். இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம் . (அல்குரான் 35 :28 )
பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும்.
(நபியே!) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா ? (இந்த குரானைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோ எல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குரான் 39 : 9 )
மார்க்கக்கல்வியை மறந்து , உலக கல்வியை முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்களே ! சிந்திக்கமாட்டீர்களா ! உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பிறகு உங்களுக்காக துஆச் செய்யும் பிள்ளைகளாக ஆகுவதை நீங்கள் விரும்பவில்லையா ?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கு கட்டாயக் கடமையாகும். (ஸுனன் இப்னு மாஜா )
கல்வி இல்லாத காரணத்தினால்தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு , மார்க்கத்தில் இல்லாத சொல்லாத காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை கல்வியைத் தேடவேண்டும்.
கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம் . அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான். இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம் . (அல்குரான் 35 :28 )
பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும்.
(நபியே!) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா ? (இந்த குரானைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோ எல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குரான் 39 : 9 )
மார்க்கக்கல்வியை மறந்து , உலக கல்வியை முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்களே ! சிந்திக்கமாட்டீர்களா ! உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பிறகு உங்களுக்காக துஆச் செய்யும் பிள்ளைகளாக ஆகுவதை நீங்கள் விரும்பவில்லையா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!