கடன் தள்ளுபடி
மனிதனை இவ்வுலகில் படைத்த அல்லாஹ், அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கத்தினராகவும் படைத்துள்ளான். இவ்வாறு படைத்த இறைவன் செல்வந்தர்களாக இருப்பவர்கள், ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவுமாறும் கட்டளையிட்டுள்ளான்.
‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன்ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (2442)