அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

அந்த இளைஞனின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளித்திரிய  வேண்டிய வயதில் , பட்டாம் பூச்சியாய் பாடித் திரிந்து மகிழ வேண்டிய பருவத்தில் இதென்ன துயரம்?  இளமையின் வசீகரத்தால் ஒளிரவேண்டிய அழகு முகத்தில் ஏன் கவலைக் கோடுகள்?

பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் தாளவில்லை . அந்த இளைஞனை அன்புடன்  அழைத்தார்  .   ''தம்பி , ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? இளமைக்குரிய  துள்ளலோ , உற்சாகமோ உன்னிடத்தில் காணப்படவில்லையே  ! ஏதேனும் கவலைகளா ?
பெரியவரின் அன்பான மொழி கேட்ட மறுவினாடியே அந்த இளைஞன் அழுது விடுவான் போலிருந்தது , அவனுடைய கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்பினான். சற்றுநேரம் கழித்து அவனே பேசத் தொடங்கினான்.