துஆவின் சிறப்பும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துஆவின் சிறப்பும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 03, 2020

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள் .

*லைலத்துல் கத்ர் இரவு 
*இரவின் மூன்றாம் பகுதி 
*கடமையான தொழுகைக்கு பின் 
*அதான் , இகாமத்திற்கு இடையில் 
*ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் 
*பாங்கு சொல்லப்படும்போது 
*மழை இறங்கும்போது 
*அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும்போது 
*வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும். என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றார்கள். சிலர் குத்பா மற்றும் ஜுமுஆ தொழுகையுடைய நேரமென்றும் கூறுகிறார்கள்.)
*உண்மையான எண்ணத்துடன் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது 
*ஸஜ்தாவில் இருக்கும்போது 
*இரவில் தூக்கத்தை விட்டு எழும்போது அப்போது ஹதீஸில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள துஆவை கேட்க வேண்டும் 
*உளு செய்து தூங்குகிற நிலையில் இடையில் ஏற்படும் விழிப்பின் போது 
*லாயிலாஹ இல்லா அன்த்த ஸூப் ஹானக்க இன்னீ குன்து மினல் லாலிமீன் - ''உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை, நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்'' என்று ஓதுவது (அல்குரான் 21.87 )

திங்கள், மார்ச் 02, 2020

துஆவின் சிறப்பும், மதிப்பும் 🌙👍

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

துஆ முஃமின்களுக்கு ஒரு பெரிய ஆயுதம்! துஆ கேட்கும் அடியார்களை அல்லாஹ் விரும்புகிறான். துஆ கேட்காத அடியார்களை அல்லாஹ் கோபப்படுகிறான் என்று ஒரு ஹதீஸின் கருத்து:

''உங்கள் இறைவன் கூறுகிறான்: நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்)என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வேன் . எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றாரோ அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.'' (அல்குரான் 40-60)