அல்லாஹ்வின் திருப்பெயரால்....
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள் .
*லைலத்துல் கத்ர் இரவு
*இரவின் மூன்றாம் பகுதி
*கடமையான தொழுகைக்கு பின்
*அதான் , இகாமத்திற்கு இடையில்
*ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம்
*பாங்கு சொல்லப்படும்போது
*மழை இறங்கும்போது
*அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும்போது
*வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும். என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றார்கள். சிலர் குத்பா மற்றும் ஜுமுஆ தொழுகையுடைய நேரமென்றும் கூறுகிறார்கள்.)
*உண்மையான எண்ணத்துடன் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது
*ஸஜ்தாவில் இருக்கும்போது
*இரவில் தூக்கத்தை விட்டு எழும்போது அப்போது ஹதீஸில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள துஆவை கேட்க வேண்டும்
*உளு செய்து தூங்குகிற நிலையில் இடையில் ஏற்படும் விழிப்பின் போது
*லாயிலாஹ இல்லா அன்த்த ஸூப் ஹானக்க இன்னீ குன்து மினல் லாலிமீன் - ''உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை, நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்'' என்று ஓதுவது (அல்குரான் 21.87 )