மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 30, 2017

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

உஷ்ணத்தின் உச்சக்கட்டம் கிழக்கு ஊரெல்லாம் பேசப்படுகிறது. காலை ஆறு மணிக்கே வியர்வை சொட்ட ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மிக மோசம்தான். மின் விசிறியும் இல்லையெனில் மனிதனின் நடவடிக்கை அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிடுமளவுக்கு சூரியன் அதன் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

சூட்டின் தாக்கம் பலரையும் பல விதமான வியாதிக்குள் சிக்கவைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை வியர்வைக்கூரு வீறு நடை போடுகிறது. சிலரைக் காய்ச்சலும், வாந்திபேதியும் வாட்டிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களை சின்னமுத்து எனும் அம்மை போன்ற நோய் அதட்டிக்கொண்டிருக்கிறது. சிலருக்குக் காலையில் 10 நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தால் மயக்கம் ஏற்படுகின்ற அளவுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.