அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 30, 2017

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

உஷ்ணத்தின் உச்சக்கட்டம் கிழக்கு ஊரெல்லாம் பேசப்படுகிறது. காலை ஆறு மணிக்கே வியர்வை சொட்ட ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மிக மோசம்தான். மின் விசிறியும் இல்லையெனில் மனிதனின் நடவடிக்கை அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிடுமளவுக்கு சூரியன் அதன் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

சூட்டின் தாக்கம் பலரையும் பல விதமான வியாதிக்குள் சிக்கவைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை வியர்வைக்கூரு வீறு நடை போடுகிறது. சிலரைக் காய்ச்சலும், வாந்திபேதியும் வாட்டிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களை சின்னமுத்து எனும் அம்மை போன்ற நோய் அதட்டிக்கொண்டிருக்கிறது. சிலருக்குக் காலையில் 10 நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தால் மயக்கம் ஏற்படுகின்ற அளவுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.