புதன், அக்டோபர் 11, 2017

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள்

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள்
நரகத்தில் நிரந்தரம்
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். 43:(74-77)

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)

ஞாயிறு, அக்டோபர் 08, 2017

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
    அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
 وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم
   இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13)

புதன், செப்டம்பர் 27, 2017

முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும்

முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும்
முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக் கொள்வதை பார்க்கிறோம்.

சில பகுதிகளில் முஹர்ரம் 10 அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திஹா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

ஞாயிறு, செப்டம்பர் 24, 2017

மண்ணறையின் எச்சரிக்கை ....

மண்ணறையின் எச்சரிக்கை ....
அல்லாஹ்வின் திருப்பெயரால்.
மானிடவர்க்கத்தின் முதல் மனிதனாக மலர்ந்த நபி ஆதம் [அலை] முதல், இன்றைய மனிதன் வரை எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் இந்த பூவுலகின் புறப் பரப்பிலே புரண்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். மண்ணாலே நம்மை உதிக்க வைத்து, மண்ணுக்கு மேலே குதிக்க வைத்து, மண்ணுக்குள்ளே மடிய வைத்து, மனித வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் இறைவன் அந்த மண்ணை வைத்து எத்தனையோ பாடங்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மண்ணுக்கு மேலே அடுக்கடுக்காக அறைகள் கட்டி எவ்வளவு உயரத்தில் நாம் உல்லாச வாழ்வு நடத்தினாலும், இறுதியிலே மண்ணுக்குள் உள்ள அறைக்கு வந்துதான் ஆகவேண்டும். மேலேயுள்ள அறையில் அவன் செய்த ஒவ்வொரு செயலைப் பற்றியும் கீழேயுள்ள அறையில் கூறித்தானாகவேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

ரஸூலுல்லாஹி [ஸல்] அவர்களின் அற்புத உணவு வகைகள் ...

ரஸூலுல்லாஹி [ஸல்] அவர்களின் அற்புத உணவு வகைகள் ...

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது. ரஸூலுல்லாஹ் s.a.w ஆரோக்கியமான உணவு உட்பட எல்லா அம்சங்களிலும் அனைத்து முஸ்லிம்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளது. நமது நபி அவர்களின் உணவைக் கவனித்துக்கொள்ள விரும்பும் முஸ்லீம்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். ரசூலுல்லாஹ்   s.a.w அவரது வாழ்நாளில் ஒரு முறை கூட வயிற்றுப் பிழை ஏற்பட்டத இல்லை ,  ஏனென்றால் அவர் ஒரு நல்ல ஊட்டச்சத்து பாதுகாப்பு.