செவ்வாய், ஜூன் 26, 2018

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துதல்

குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னித்துவிடுவான். (அல்குர்ஆன் 4:116)

எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, திட்டமாக அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான். அவனுடைய தங்கிமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாரும் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 5:72)

வெள்ளி, மார்ச் 30, 2018

இளைஞர்கள் செல்லும் பாதை எது ?

இளைஞர்கள் செல்லும் பாதை சரியா ?

இளைஞர்கள் செல்லும் பாதை எது ?
மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

ஒரு மனிதன் தான் இளமையான பருவத்தில் தான் தவறிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த கால கட்டத்தில் தான் மனிதன் நல்லது, கெட்டது போன்ற பல்வேறு நற்செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி கொள்கிறான்.

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்

بسم الله الرحمن الرحيم

ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்

உலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள் மூலமாக கூட ஏற்படும்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு நோட்டமிட்டபடி) ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?’ என்று கேட்க மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடும்லும் குழப்பங்கள் விளையப் போவதைப் பார்க்கிறேன்’ என்றார்கள். நூல் : புகாரி

தலாக் ! தலாக் ! தலாக் !!!

தலாக் ! தலாக் ! தலாக் !!!                                                                                                                                                       ஒரு கணவன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது அவர் கோபத்தில் “தலாக், தலாக், தலாக்”என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அது மூன்று தலாக்காக ஆகிவிடுமா?
இல்லை அது முதல் தலாக்தான் ஆகுமா?

தலாக் சொல்வதின் சட்டம் என்ன?

🍂பதில்🍂

       கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். அது உடனுக்குடன் சரியாகிவிடும்.
அதுபோலல்லாமல் பிரச்சனைகள் தீர்க்க முடியாத முற்றிய  நிலைமைக்கு போய் அது தொடந்து கொண்டேயிருந்து வாழ  முடியாத சூழ்நிலை வரும்போது இஸ்லாம் நமக்கு காட்டிதந்த வழிதான் “தலாக்” எனும் விவாகரத்து.

புதன், ஜனவரி 24, 2018

சோதனைகள் வருவது எதனால் ?

சோதனைகள் வருவது எதனால் ?
ஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக  வந்துடே இருக்கு.!தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.!
கேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.?

2.அல்லாஹ்  அன்பினால் கொடுக்கும் சோதனையா.?

3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.?

4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும்.?
பொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.?
தெளிவான விளக்கம் தாங்க.!