அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஜனவரி 18, 2014

ஐயமும் !தெளிவும்!!





ஐயம்: ஷரீ அத் சட்டதிட்டங்களுக்கு சுயேட்சையாக விளக்கம் கொடுப்பது “”இஜ்திஹாத்”, எந்த ஒரு பிரச்சனைக்கும், முன்னாள் சட்டமேதைகளான நமது மேன்மைக்குரிய இமாம்கள் செய்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஷரீ  அத்தை விளங்கிக் கொள்வதே “”தக்லீத்” என்று மரியம் ஜமீலா அவர்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன?
M.A.ஹாஜி முஹம்மது நிரவி

தெளிவு: கண்ணியமிக்க இமாம்கள் பேரால் நாற்பெரும் கூறுகளாய் பிரிந்து சிக்கி, சீரழிந்து அழிவின் விழிம்பில் இருந்து கொண்டிருக்கும் நமது சமுதாய மக்கள் பெரும்பாலோரின் செயலை அடிப்படையாகக் கொண்டு, சகோதரி மரியம் ஜமீலா சரியாகவே எழுதியுள்ளார். எனினும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளான அல்குர்ஆனுக்கும், இதனை நடைமுறைப்படுத்திக் காட்டிய நாம் உயிரினும் போற்றும் நபி(ஸல்) அவர்களின் வழி முறைக்கும் மாற்றமாக சுயேச்சையாக விளக்கம் கொடுத்து மனித யூகத்தை மார்க்கமாக்குவதற்கு உலகில் யாருக்கும் உரிமையில்லை.

இறைவனையும், இறைத் தூதரையும்(ஸல்) உளமாற ஒப்புக் கொண்ட நாம், யாருடைய விளக்கத்தை-தெளிவை ஏற்று நடக்க வேண்டும் என்பது குறித்து வல்ல அல்லாஹ் கூறும்போது (நபியே!) உம்மை ஷரீ  அத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றுவீராக! அல் ஜாஸியா (45: வசன எண் 18) என்றும் தெளிவான அத்தாட்சிகளையும் நெறிநூல்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும், உமக்கு இந்நெறிநூலை நாம் அருளினோம் என்றும் கூறுகிறான். சூரத்துன் நஹ்ல் 16: வசன எண் 44.

மேலும் வல்ல அல்லாஹ், மறுமையை நம்பும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியான வழி காட்டல், அல்குர்ஆனும்-அதனை நடைமுறைப் படுத்திக் காட்டிய நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலும் என்றே கூறுகிறான்.
(அல்குர்ஆன் 33:21, 4:59)

கூடுதல் குறைவின்றி தனது ஷரீ  அத்தை மட் டுமே பின்பற்றச் சொல்லும் அல்லாஹ், தான் காட்டிய நேர்வழி, உலக மக்கள் அனைவரும் எளிதாக விளங்கும் பொருட்டு மிகவும் லேசானது என்றும் கூறுகிறான்.
(அல்குர்ஆன் 4:28, 54:17,22,32,40)

மக்கள் எளிதாக விளங்கும் பொருட்டு வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மார்க்கம் எவ்வித குறையுமின்றி நிறைவு செய்யப்பட்டதாகவும் அவனே கூறுகிறான். (அல்குர்ஆன் 5:3)

நபி(ஸல்) அவர்களும் ஹலால்-ஹராமை தெளிவுபடுத்தி இந்த ஷரீ  அத்தை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்கள். மேலும் முஸ்லிம்கள் தீர்ப்பளிப்பது பற்றி கூறும்போது அல்லாஹ் அருள் செய்த (சட்டதிட்டத்) தைக் கொண்டே அவர் களிடையில் தீர்ப்புச் செய்வீராக (அல்குர்ஆன் 5:44,45,47) என்றும் தெளிவுபட கூறுகிறான்.

நெறிநூல்களை அறிந்தவர்களிடம் அறியாத மக்களை கேட்டு அறியச் சொன்ன அல்லாஹ் கண்மூடி சுய சிந்தனையற்று அவர்களைப் பின்பற்றச் சொல்லவில்லை. மாறாக “”அவர்கள் சொல்லை-நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம். இவர்கள் தாம் நல்லறிவுடையோர்”. (அல்குர்ஆன் 39:18) என்று கூறுகிறான்.

இதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் பயங்கரமான வழிகேட்டில் இருப்பதாக எச்சரிக்கவும் செய்துள்ளான். “”அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண் ணுக்கோ, உரிமையில்லை. ஆகவே அல்லாஹ் வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்க மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”. சூரத்துல் அஹ்ஜாப் 33: வசன எண் 36.

இவ்வளவு தெளிவுபடுத்தி எச்சரித்த பின்பும் கண்ணியமிக்க இமாம்களை, அவர்களின் சொல்லையும், எச்சரிக்கைகளையும் மீறி தக்லீது-கண்மூடி குருட்டுத்தனமாகப் பின்பற்றச் சொல்லும் மவ்லவிகளின் நிலையும், அவர்களைச் சுய சிந்தனையற்று பின்பற்றும் பெரும்பாலான மக்களின் நிலையும் பரிதாபத்துக் குரியதே! நமது கொடிய விரோதி ஷைத்தான் எந்த அளவு தனது ஆதிக்கத்தை முஸ்லிம்கள் மீது செலுத்தியுள்ளான் என்பதை இவர்களின் பேச்சுக்கள் செயல்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர்களின் நேர்வழிக்காக நாம் துஆ செய்வதோடு, இறைவனின் கடுமையான எச்சரிக்கைகளையும் இம்மாதிரி யானவர்களுக்கு நினைவூட்டுவோம்.

“”நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட் டப்படும் அந்நாளில் ஆ! கைசேதமே! அல் லாஹ்வை நாங்கள் வழிபட்டிருக்க வேண் டுமே; இத் தூதருக்கும் நாங்கள் வழிப்பட் டிருக்க வேண்டுமே! என்று கதறுவார்கள்.

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள் என்றும் அவர்கள் கதறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக. அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (என்பர்) சூரத்துல் அஹ்ஜாப், வசன எண்கள்: 33:66,67,68.
—————————————————-

ஐயம்: யாஸீன் சூராவில் 13,14ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் இரு தூதுவர்கள் யார்? மூன்றாமவர் யார்? 26,27ம் வசனத்தில் மூன்றாம் நபரை அம்மக்கள் கொன்ற பின், இறைவன், அந்நபரை சொர்க்கத்தில் பிரவேசிப்பாயாக! என்று உடனே சொல்கிறானே, அப்படியானால் இறந்து போன ஏனைய நபிமார் கள் இறைநேசர்கள் நிலை என்ன? அந்நபரை அல்லாஹ் சொர்க்கம் புகச் சொன்னதும் சந் தோ­மடைகிறார் என்றால் அவரது ஆன்மா -நஃப்ஸ் உயிருடன் இருக்கத்தானே செய்கிறது. இந்த ஆயத்தின் மூலம் மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது மறுமை வரை இருக்கிறது தெரிகிறதே? வசனம் 27ல் அந்த நல்லடியார் இறைவனிடம் துஆ கேட்கும் தோரணையில் அமைந்திருப்பதால் ஒலியுல்லாக்கள் நாம் இறைஞ்சுவதை கேட்கும் சக்தியையும், நமக்காக அவர்கள் இறைஞ்சும் தன்மையையும் ஏன் பெற்றிருக்க கூடாது? இதற்கான பதிலை அதிசீக்கிரம் எழுதவும்.
இறையடிமை ஜமால், சென்னை-14.

தெளிவு: அல்லாஹ் இவ்வசனங்களில் கூறும் மூன்று தூதுவர்களின் பெயரைப் பற்றி பல சஹாபாக்கள் பல்வேறு பெயரை குறிப்பிடுவதால் தீர்க்கமாக கூற முடியாது.

அவரை அம்மக்கள் கொன்றபின், அல்லாஹ் அவருடைய நஃப்ஸை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். அவ்வாறு புகுத்தப்பட்ட நஃப்ஸ் தனது நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவே தொடர்ந்து வசனங்கள் வருகின்றன.

நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்துச் சொல்லும்போது, அவர்களின் நஃப்ஸ் பச்சை நிறத்துப் பறவையின் கூட்டுக்குள் புகுத்தப்பட்டு சுவனத்தில் உள்ளன.அவை அங்கு விரும்பிய பிரகாரம் உண்டு சுற்றித்திரிகின்றன என்றார்கள். இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது.

நல்லடியார் என்று நாமெல்லாம் போற்றும் ஏனையோர் கப்ரில் விசாரணைகள் முடிந்தவுடன், மலக்குகள் அவருக்கு உரிய இடத்தைக் காட்டி இதுவே கியாமநாள் வரை உங்களது தங்குமிடம் என்று கூறுவர். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி புகாரி-முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்கள் கூறும்போது கப்ரில் நல்ல மனிதர் வைக்கப்பட்டு விசாரணைகள் முடிந்த உடன் நான் எனது குடும்பத்தாரிடம் சென்று எனக்கு கிடைத்த இம்மகத் தான வாழ்வை கூறிவிட்டு வருகிறேன் என்று கேட்கும் போது புது மணமகனைப் போல் உறங்கு என்று கூறப்படும் என்றார்கள். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கும் இச்செய்தி திர்மிதியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கூறினார்கள்: கப்ரில் விசாரணை முடிந்தபின் சுவனத்து ஆடைகள் அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பை அவருக்கு விரித்து படுக்க வைக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். பர்ரா இப்னு ஆஸிப்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

மரணத்திற்கும்-மறுமைக்கும் இடையிலுள்ள இந்நிலைகளை வைத்து உலகத்தில் உயிருடன் இருக்கிறார்கள்; நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுவதும், கேட்கும் சக்தியை பெற்றுள்ளார்கள் என்று கூறுவதும், நாம் அவரிடம் இறைஞ்சினால் நமக்காக அவர் இறைவனிடம் பரிந்துரை செய்வார் என்பதும் பல குர்ஆன் வசனங்களுக்கும் நபி மொழிகளுக்கும் விரோதமானது. வல்ல அல்லாஹ் இம்மாதிரியான தவறான எண்ணங்கள் செயல்களை விட்டும் உலக முஸ்லிம்களைப் பாதுகாப்பானாக!
———நன்றி அந்நஜாத் .காம்
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!