ஆதமுடைய மகனே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதமுடைய மகனே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

ஆதமுடைய மகனே!

ஆதமுடைய மகனே!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

ஆதமுடைய மகனே! அல்லாஹூ தஆலாவின்  மீதுள்ள நம்பிக்கையிலிருந்து தளர்ந்துவிடாதே ! ஏனென்றால் ஷைத்தானாவன் உனக்கு வறுமையைக் காட்டி அல்லாஹூ தஆலாவின்  இபாதத் செய்வதிலிருந்து உன்னை தடுத்திட முயற்சி செய்வான், எனவே, நீர் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாதே !

ஆதமுடைய மகனே! உன்னையே நீ சிந்தித்துப் பார்! நீ இல்லாதவனாக இருக்க, ஒரு துளி இந்திரியத்திலிருந்து அல்லாஹூ தஆலா  உன்னை இரு அழகான மனிதனாக [மேலான படைப்பாக] படைத்தான். நீ உன் தாய் வயிற்றிலிருக்கும் போதே உன்னுடைய உடலில் ரூஹை அவனே புகச் செய்தான். அந்த ரூஹ் புகுந்ததை உன் தாய் கூட அறியமாட்டாள் . நீ உன் தாய் வயிற்றிலிருக்கும்போது உன்னைப் பாதுகாத்தது யார்? அவன்தானே [அல்லாஹ் ] பாதுகாத்தான்.