இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 27, 2018

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவது நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அக்குடும்பங்களின் துயரம் இலேசாகும், வலி குறையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: தமது சகோதரர் கவலையாக உள்ள நேரத்தில் அவரை ஆறுதல்படுத்துபவருக்கு மறுமைநாளில் ஆபரணங்களுடன்கூடிய கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். (இப்னு மாஜா)

ஒருவர் இறந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்குப் பொறுமையை நினைவூட்டி அதற்கு அல்லாஹ்விடம் உள்ள கூலியை அச்சமயத்தில் கூறுவதும் அவசியமாகும்.