ஓடித் திரிந்தாலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓடித் திரிந்தாலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 10, 2016

ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!

ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

நிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட  எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம். 50 ஆண்டு அல்லது 60 ஆண்டு வாழ்வுப் பயணத்தை 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது  ''தவக்கல் ' [நம்பிக்கை] இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பகான  ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத்  தருவாயையும் மறந்து விட்டு , மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம். பொய் , புரட்டு பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம், போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான். உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி பாவத்தில் மூழ்கும்போது வாழ்க்கையே நரகமாகி  விடுகிறது. ஏன்  இந்த இழிநிலை?!