அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
கடன் முறைகளும் சட்டங்களும் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடன் முறைகளும் சட்டங்களும் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 10, 2020

கடன் முறைகளும் சட்டங்களும் ...




கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓன்று, மனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கடன் வாங்காமல் இருக்க முடிவதில்லை. எனவே அல்லாஹுவும் அவனது தூதரும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கான சட்டங்களையும் முறைகளையும் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர். அவற்றை அறிந்து செயல்படுவது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும்.
கண்ணீர் இல்லாத வாழ்க்கைக் கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது ஆனால் கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம் தான்.

கடன் அன்பை முறிக்கும் என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், நாட்டுக்குப் பொருந்தாது போலும்.