கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓன்று, மனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கடன் வாங்காமல் இருக்க முடிவதில்லை. எனவே அல்லாஹுவும் அவனது தூதரும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கான சட்டங்களையும் முறைகளையும் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர். அவற்றை அறிந்து செயல்படுவது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும்.
கண்ணீர் இல்லாத வாழ்க்கைக் கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது ஆனால் கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம் தான்.
கடன் அன்பை முறிக்கும் என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், நாட்டுக்குப் பொருந்தாது போலும்.