சிந்திக்க சில நபிமொழிகள் ....... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திக்க சில நபிமொழிகள் ....... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 03, 2016

சிந்திக்க சில நபிமொழிகள் .......

சிந்திக்க சில நபிமொழிகள் .......
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால் துவங்குகிறேன்....

ஒருமுறை அண்ணல் நபி [ஸல்] அவர்கள் பள்ளிவாசலினுள் இருந்தபோது, தலைமுடியும் தாடியும் ஒழுங்கின்றிக் கிடந்த ஒருவர் பள்ளிவாசலினுள் நுழைவதைக் கண்ட அண்ணலார் அவர்கள், அவரைப் பார்த்து  ''திரும்பிப் போய்  தலையையும் தாடியையும் சீப்பால் வாரி ஒழுங்குபடுத்திக் கொண்டு வா'' என சைகை காட்டினார்கள். அவர் அவ்வாறே சென்று தலைமுடியை வாரிக் கொண்டு திரும்பி வந்தார். அண்ணல் நபி [ஸல்] அவர்கள்,  ''மனிதனின் தலைமுடி தாறுமாறாகக் கலைந்துபோய், அவன் ஷைத்தானைப் போல் காட்சியளிப்பதை விட இது நல்லதல்லவா? என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்.. அதாஉ பின் யஸார் [ரலி]
நூல்..மிஷ்காத்]