அல்லாஹ்வின் கருணை ,அன்பு , நேசம் . சுவனக்கோட்டை யாருக்கு என்பதை இதன் மூலம் அறியலாம்.. மன்னிப்பை நாம் மனபூரவாமாக அள்ளித் தெளிக்கலாம்... |
அல்லாஹ் கூறுகின்றான்..
''என் அடியார்களே! [உங்களில்] எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்- நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்- நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்,, மிக்கக் கருணையுடையவன்'' [என்று நான் கூறியதை நபியே ] நீர் கூறுவீராக .
39..53]
இந்த ஆயத்தை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவும். யாராவது அப்படி அதிகமாக பாவங்கள் செய்து , ''இதுவரை நான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேன் இனி என்னை அல்லாஹ் எங்கே மன்னிக்க போகிறான் என்று எண்ணிவிடக் கூடாது. அல்லாஹ் மிக்கக் கருணையுள்ளவன் என்பதை மேலே கூறியுள்ள வசனம் ஒன்று போதும். அதே நேரத்தில் நிறைய பாவங்கள் செய்யலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பாவங்கள் செய்துக் கொண்டு பிறகு பாவமன்னிப்பு கோரலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஒருவருக்கு எப்பொழுது, எப்படி மரணம் வரும் என்று சொல்ல முடியாது. கவனமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவும்!