சோதிக்கப்பட்ட மூவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோதிக்கப்பட்ட மூவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 08, 2016

சோதிக்கப்பட்ட மூவர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
சோதிக்கப்பட்ட மூவர் ..............

நபி [ஸல்] நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில்  ஒரு வெண்தோல் நோயுடையவர், ஒரு வழுக்கைத் தலையுடையவர் , ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி, அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் [முதலில்] வெண்தோல் நோயுடையவரிடம் வந்து, உமக்கு மிக உவப்பானது எது என வினவினார். அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல், மக்கள் அறுவருக்கும்  இந்நிறம் என்னை விட்டுப் போய்விடுவது ஆகியவை என்றார். அவரை அம்மலக்கு  தமது கரத்தால் தடவவே , அவரது அறுவறுப்பான  நிறம் போய்விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார். பின்னர் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது? என அவரிடம் அம்மலக்கு  வினவினார். அவர் ஒட்டகை எனக் கூறவே, அவருக்கு ஒரு சின்ன ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக! என  [அவருக்கு] அம்மலக்கு  [வாழ்த்துக்] கூறினார்.