தொழுகையில் தொடரும் நன்மைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழுகையில் தொடரும் நன்மைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 11, 2016

தொழுகையில் தொடரும் நன்மைகள்..

தொழுகையில் தொடரும் நன்மைகள்..


ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்தல் இதுபோன்ற பல சிறந்த அமல்கள் இருந்தாலும் அல்லாஹ் தொழுகைக்குத்தான் முன்னுரிமை வழங்கிறான்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழுகைக்கு மட்டும் பல நன்மைகளை வழங்குகிறான். தொழுகைக்காக உளூ செய்தால், தொழுவதற்கு பள்ளிக்கு நடந்து வந்தால், பாங்கு கூறினால். பாங்குக்கு பதில் கூறினால், பாங்கு முடிந்த உடன் துஆ ஒதினால் என்று எல்லாவற்றுக்கும் நன்மை, நன்மை என்று வாரி வழங்குகின்றான்.