பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 23, 2016

பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் !

பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் !
அல்லாஹ்வின் திருப்பெயரால் ......................
ஓர் ஊரில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருக்கும் பொழுது ஓர் ஆற்றின் ஓரத்தில் கிடந்த ஒரு பலத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். அப்பழம்  யாருடையது என்று தெரியாமலும் மேலும் அதன் உரிமையாளரின் அனுமதி இன்றி அதை சாப்பிட்டது தவறு என்பதையும் அவரின் தாயார் அறிவித்தார் . எனவே அப்பழத்தின்  உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் மன்னிப்புக் கோரும்படியும் அவர் தாயார் கூறினார். அவரின் தாயார் கூறியபடி பழத்தின் உரிமையாளரை எப்படியோ விசாரித்து கண்டு பிடித்தார் அவ்வாலிபர். அந்த உரிமையாளரிடம் நடந்தவற்றைக் கூறி அவ்வாலிபர் மன்னிப்பை வேண்டினார். இவ்வாலிபரின் பக்தி நிறைந்த வாழ்க்கையைக் கண்ணுற்ற அவ்வுரிமையாளர் தம்முடைய பக்தி நிறைந்த அருமை மக்களுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்க எண்ணங் கொண்டார்.