பொறாமையின் விளைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொறாமையின் விளைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 21, 2016

பொறாமையின் விளைவு

பொறாமையின் விளைவு .......
அல்லாஹ்வின் திருப்பெயரால்............

ஓர் ஊரில் ஒரு சுல்தான் ஆட்சி புரிந்து வந்தார். அந்த அரசரிடம் ஒவ்வொரு வாரமும் ஒரு மகான் சென்று அறிவுரைகள் கூறுவது வழக்கம். ஒரு நாள் அந்த அரசரை நோக்கி,  ''அரசரே! யாரேனும் தங்களுக்கு உதவி புரிந்தாலும் சரி அல்லது தங்களுக்கு தீங்கிழைத்தாலும் சரி அவருக்கு தாங்கள் நன்மையையே செய்யுங்கள் ,, தீமை ஒன்றும் செய்திட வேண்டாம்'' என்று அந்த மகான் கூறினார். அந்த அரசர் தமக்கு நல்லறிவைக் கற்பிக்கக் கூடிய  மகானுக்கு தம் அரசவைக்கு வரும்போதெல்லாம் அன்பளிப்பாக ஏதேனும் சன்மானங்களை கொடுப்பது வழக்கம்.

அந்த மகான் அரசவைக்கு அடிக்கடி சென்று சன்மானங்களை பெற்று வருவதை ஒருவன் கண்டு அந்த மகான் மீது பொறாமை கொண்டான். தானும் அந்த அரசருடன் பழகி ஒன்றாக இருந்தும் சன்மானம் வழங்கப்படவில்லையே என்று ஆத்திரமடைந்தான்.