அல்லாஹ்வின் திருபெயரால்.....
மனிதனுக்கு நோய் வந்தால் என்றால் மனமும் , உடலும் சோர்ந்து விடும் . உடலில் ஒருவித மாற்றங்கள் காணப்படும். முகத்தில் பிரகாசம் இருக்காது. பசி இருக்காது. நாவில் ருசியும் இருக்காது. செல்வத்திலே சிறந்தது 'ஆரோக்கியம்' தாம்! ஒருவருக்கு நோய் வந்தால் , அவர் எப்படி பொறுமைக் காக்க வேண்டும்.
பொறுமையாக இருப்பது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல . ரொம்ப சிரமம்தான்! பொறுமை காக்க , அல்லாஹ்வின் உதவியும், கிருபையும் அவசியம் வேண்டும். பொறுமையின் தன்மை நமக்கு அல்லாஹ் தந்துவிட்டான் என்றால் ''அல்ஹம்துலில்லாஹ்!'' பொறுமையாக இருக்கும் விசுவாசிகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்..