வாழ்கையின் உண்மை அறிவோம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்கையின் உண்மை அறிவோம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 07, 2014

ஹஜ் செய்யாத ஹாஜி !

அல்லாஹ்வின் திருபெயரால் ...........
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இறுதிக் கடமையான இந்த ஹஜ் . ஹஜ் செய்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் தான் என்று சொல்ல வேண்டும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் இருக்கிறது. ஒப்புக்கொள்ளப்படாத ஹஜ்ஜும் இருக்கிறது .

ஞாயிறு, ஜனவரி 05, 2014

முஸ்லிம் விவகாரத்தில் கவனம் செலுத்துதல்!




“யார் முஸ்லிம்களின் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ அவர் அவர்களைச் சார்ந்தவரல்ல” என்ற பிரபலமான ஹதீஸை நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்று இலங்கையை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களும் பள்ளிவாயல்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை, எமக்கு அண்மையிலுள்ள இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் அங்கும் முஸ்லிம்கள் விவகாரம் பிரச்சினைக்குள் காணப்படுகின்றது, கஷ்மீரை எடுத்தாலும் மிக அழகிய பிரதேசம் அலங்கோலமாக்கப்படுகின்றது. பாகிஸ்தானிலுள்ள மக்களை தீவிரவாதிகள் என அடக்கி யொடுக்கும் நிலை, பலஸ்தீன், ஈராக், சிரியா, லிபியா, எகிப்து என முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

ஞாயிறு, ஜூன் 30, 2013

வாழ்கையின் உண்மை அறிவோம்!

வாழ்கையின் உண்மை அறிவோம்!

அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரது இருப்பிடம் (எதுவென்று) காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும் .அதாவது,அவர் சொர்கவாசியாக இருந்தால் , சொர்க்கவாசிகளின் இருப்பிடமும் , நரகவாசியாக இருந்தால் , நரகவாசிகளின் இருப்பிடமும் (எடுத்துக் காட்ட்டப்படும்)
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது ) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் . அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன் . நரகத்தையும் எட்டிப் பார்த்தேன் . அதில் குடியிருபோரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
இதை இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்து விட்டதாகக் கூறி விட்டு , ,, அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார் . நபி (ஸல்) அவர்கள் ஆம் (பலனளிக்கும்)என்று பதிலளித்தார்கள் . அந்த மனிதர் என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது . அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு , தங்களை சாட்சியாக ஆக்குகிறேன் ,, என்று கூறினார்.


ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்.