அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஏப்ரல் 03, 2021

ஆணுக்குச் சில அறிவுரைகள்

 





*ஆணுக்குச்  சில   அறிவுரைகள்!*




அஹ்மத் பின் ஹம்பல் என்ற ஒரு மகான் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.


பிறகு மகனுக்குச் சில அறிவுரைகளைக் கூறினார்கள்:


“மகனே!  சில நடைமுறைகளை நீ கடைப்பிடித்தால், நீயும் உனது மனைவியும் இன்பமாக வாழலாம்!”

ஞாயிறு, பிப்ரவரி 14, 2021

சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்

 சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்



சமூக வலைதளம் என்பது தற்போதைய சமூகத்தில் அசைக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. ஒரு செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உள்ளங்கையில் இருக்கும் தொலைபேசியே போதுமானதாக ஆகிவிட்டது. இதற்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக உள்ளன. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக சக மனிதர்களைத் தொடர்பு கொள்வது எளிதாக ஆகிவிட்டது. இப்படி இதனுடைய நன்மைகள் பலவாறு இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளும் மற்றொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.

புதன், பிப்ரவரி 03, 2021

தன்னம்பிக்கை

 




என்ன வாழ்க்கை இது என்று

நொந்து கொள்பவர்களுக்காக

இந்த தன்னம்பிக்கை பதிவு.


கடைசி வரை படியுங்கள்

அந்த பெண்ணின் அசாத்திய

மன துணிச்சல் நம்முள்ளும்

ஊடுருவி உற்சாகப்படுத்தும்...

சனி, ஜனவரி 30, 2021

ஆடம்பர வாழ்க்கை

 




ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !

நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !

"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''

"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர்.

நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.

இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.

"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள்.

ஞாயிறு, டிசம்பர் 27, 2020

வலை தளங்களின் வலை விரிப்புகள்




வழுக்கி விழும் வாலிபப் பெண்கள்


(கடந்த மே 27-2017 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் Predators on the prowl on social networking site) ‘சமூக வலைத்தளங்களில் இரை தேடி அலைகின்ற காமுக மிருகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தி ஆந்திரா மாநிலத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியது. பருவ வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்பதால் இதை வாசகர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.)


சமூக வலைதளங்களில் சாதகங்கள், சாதனைகள்  நிறைந்து  இருப்பது போலவே அதில் பாதகங்களும் படுசாபக்கேடுகளும் நிறைந்திருக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் அண்மையில் விஜயவாடாவில் நடந்த ஒரு கோர, கொடூர சம்பவம்.