வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது : اَللّٰهُمَّ اِنِيْ اَسْاَلُكَ خَيْرَ الْمُوْلِجِ وَخَيْرَ الْ مُخْرِجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبَّنَا تَوَكَّلْنَا۰ " எவரேனும் தம் வீட்டிற்கு திரும்பி வந்து ( உள்ளே ) நுழையும் பொழுது , ' அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஃகய்ரல் மூஃலிஜி வஃகய்ரல் முஃக்ரிஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா வ அலல்லாஹி ரப்பனா தவக்கல்னா ' ( இறைவா ! நிச்சயமாக நான் வீட்டினுள் நுழைவதில் நன்மையையும் , வெளியில் புறப்படுவதில் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் உள்ளே செல்கின்றோம் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் வெளியில் புறப்படுகிறோம் . மேலும் , நம் இறைவனான அல்லாஹ்வின் மீதே நாம் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம் !) என்று கூறிய பிறகு தம் குடும்பத்தினருக்கு ' ஸலாம் ' கூறவும் " என்று கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அபூ மாலிகில் அஷ்அரீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : அபூதாவூத் . " மகனே ! நீர் உமது வீட்டாரிடம் சென்றாலும் ஸலாம் கூறவும் . உமது ஸலாம் உமக்கும் , உமது வீட்டாருக்கும் அபிவிருத்தி நல்கக் காரணமாகும் " என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : திர்மிதீ .
சனி, ஜூன் 12, 2021
புதன், பிப்ரவரி 03, 2021
தன்னம்பிக்கை
என்ன வாழ்க்கை இது என்று
நொந்து கொள்பவர்களுக்காக
இந்த தன்னம்பிக்கை பதிவு.
கடைசி வரை படியுங்கள்
அந்த பெண்ணின் அசாத்திய
மன துணிச்சல் நம்முள்ளும்
ஊடுருவி உற்சாகப்படுத்தும்...
ஞாயிறு, அக்டோபர் 18, 2020
மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!
வாழ்வாதாரம் தேடி வ
ளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான்.
கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி வைத்தான்; இங்கு என்னை சமையல் வேலையில் தள்ளி விட்டான்.
எட்டு மணி நேர டூட்டி, இரண்டு மணி நேரம் ஓட்டி (ஓவர் டைம்) என்றார்கள்; ஆனால் இங்கு 18 மணி நேர டூட்டி; உண்ண உணவில்லை; உறங்க நேரமில்லை. பகல் நேரத்தில் கடுமையான வெயில்! இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர்!
வெள்ளி, ஆகஸ்ட் 21, 2020
நபிகளார் சந்தித்த சங்கடங்கள்..!
ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்கையில் ஏராளாமான சங்கடங்களை சந்தித்து இருக்கிறோம்.சில சங்கடங்கள் நம்மையே பாதித்து இருக்கிறது என்றாலும் அதிலிருந்து ஏராளாமான பாடங்களை கற்று இருப்போம். அதே போன்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்கையிலும் சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உண்மையில் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன.? என்பதை காண்போம்..
நவிகளாரின் நற்குணம்
முஹம்மதே.! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
(திருக்குர்ஆன்:68:4.)
கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்…
வியாழன், ஆகஸ்ட் 13, 2020
மறுமையின் முதல் நிலை மண்ணறை.!
மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகள் பற்றி அறிந்து அதனிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும்.
மண்ணறை வேதனை
“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)”
(அல்-குர்ஆன் 40:46)