சனி, அக்டோபர் 02, 2021

அழிவை நோக்கி செல்லும் சமூகம்

 





*எம் சமூகம் இந்த உலகை ஆளும் காலையில் ஏழு மணிக்கு மதரஸா சென்ற சமுதாயம் இன்று பள்ளி வாகனத்திற்காக காத்து நிற்கிறது. ஆம் .குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*மாலையில் வீட்டில் ஓதிய எமது சமூகம் இன்று ட்யூசன் சென்று கொண்டிருக்கிறது. ஆம் .குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*

சனி, ஜூலை 17, 2021

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!

 



 மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு இவ்வளவு ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு இன்னும் அதிகம்  ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 7000ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 10000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

சனி, ஜூன் 19, 2021

ஒரு முஸ்லிம், இஸ்லாத்தின் அடையாளமாவானா?

 






லண்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம் தான் குடியிருக்கும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு தினமும் பேருந்தில் பயணம் செய்வார், குடியிருக்கும் இடத்திற்கு புதிதாக வேலை மாற்றலாகி வந்திருந்தார் அவர்.


பேருந்தில் சில நாட்களில் அதிகமான பயணிகள் இருப்பார்கள்; சில நாட்களில் ஒருசிலர் இருப்பார்கள். ஆனாலும் தொடர்ந்து அவர் ஒரே பேருந்தில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தார்.

சனி, ஜூன் 12, 2021

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

 



  ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பது எளிதாகப் புரிந்துவிடும். இன்று தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதால் நாட்டில் தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகுவதையும் அதனால் பெரும்பாலான மக்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்றிருப்பதையும் நாம் அறிவோம். இன்று நாம் அனைவரும் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இதுவே: மனித வாழ்வில் அந்த ஒழுக்கத்தை எவ்வாறு உண்டாக்குவது?

வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது

 வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது : اَللّٰهُمَّ اِنِيْ اَسْاَلُكَ خَيْرَ الْمُوْلِجِ وَخَيْرَ الْ مُخْرِجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبَّنَا تَوَكَّلْنَا۰ " எவரேனும் தம் வீட்டிற்கு திரும்பி வந்து ( உள்ளே ) நுழையும் பொழுது , ' அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஃகய்ரல் மூஃலிஜி வஃகய்ரல் முஃக்ரிஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா வ அலல்லாஹி ரப்பனா தவக்கல்னா ' ( இறைவா ! நிச்சயமாக நான் வீட்டினுள் நுழைவதில் நன்மையையும் , வெளியில் புறப்படுவதில் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் உள்ளே செல்கின்றோம் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் வெளியில் புறப்படுகிறோம் . மேலும் , நம் இறைவனான அல்லாஹ்வின் மீதே நாம் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம் !) என்று கூறிய பிறகு தம் குடும்பத்தினருக்கு ' ஸலாம் ' கூறவும் " என்று கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அபூ மாலிகில் அஷ்அரீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : அபூதாவூத் . " மகனே ! நீர் உமது வீட்டாரிடம் சென்றாலும் ஸலாம் கூறவும் . உமது ஸலாம் உமக்கும் , உமது வீட்டாருக்கும் அபிவிருத்தி நல்கக் காரணமாகும் " என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : திர்மிதீ .