வேவு பார்க்காதீர்கள் (புறம் /குறை .part5 )


 வேவு பார்க்காதீர்கள் (புறம் /குறை .part5 )

وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌


(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். 


இந்த வசனத்தில் “லாஜஸஸ்ஸூ’ என்ற வார்த்தைக்கு வேவு பார்க்காதீர்கள் என்று பொருள். 


இறைதூதர் யஅகூப் (அலை) அவர்கள் கூரியதாக அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.


يٰبَنِىَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَايْــٴَــسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ‌ اِنَّهٗ لَا يَايْــٴَــسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ‏ 

“என்னுடைய மக்களே! நீங்கள் செல்லுங்கள், பின்னர், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் துருவித்தேடுங்கள்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! 


(அல்குர்ஆன் : 12:87)


இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்


தஜஸ்ஸூஸ் என்பது ஒன்றைத் தேடி ஆராய்வதை குறிக்கும்.

மக்கள் பேசுவதை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்பதை அல்லது அவர்களின் வாசல்களில் நின்று ஒட்டுக் கேட்பதை குறிக்கும்


இமாம் தபரி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விரிவுரை வளங்கும் போது ‘ ‘பிறருடைய குறைகள்’ எனப்படுவது அவர்களின் அந்தரங்க இரகசியங்களும் அவர்களின் கண்ணியமுமாகும்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.


இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திர்கு விரிவுறை வளங்கும் போது ‘ துருவித் துருவி ஆராய்வது என்பது அதிகமாக கெட்ட விடயங்களில் தான் காணப்படும்’ என விளக்கமளிக்கின்றார்கள்.


இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது ‘வெளிப்படையாக தெரிகின்ற வெற்றை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய சகோதரனின் குறைகளை வெளியில் தெறியாமால் இறைவன் மறைத்த பிறகு அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் ஆராய வேண்டாம்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.


“தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறி : இப்னு அப்பாஸ் (ரலி),


நூல் : புகாரி (7042), திர்மிதீ (1673)


எனவே வேவு பார்க்காதீர்கள் அதுவும் கெட்ட எண்ணத்தில் வேவு பார்ப்பது பாவமான காரியம்.


புறம் பேசி திரியாதீர்கள்

وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ 


உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


இந்த வசனம் (அல்பஃகீத்) புறம் பேசுவதற்குத் தடை விதித்துள்ளது


புறம் பேசுவது என்றால் என்ன என்று நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது


அப்போது அவர்கள் நீர் உம்முடைய சகோதரர் குறித்து அவருக்கு பிடிக்காத ஒன்றை கூறுவது என்று சொன்னார்கள்.


அப்போது ஒருவர் நான் சொல்லும் குறை என் சகோதரனிடம் இருந்தாலும் புறம் பேசுவதாக ஆகுமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் சொல்லும் குறை உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் தான் நீர் அவரைப் பற்றி புறம் பேசி நீர் என்றாகும் நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ நீர் அவர் மீது அவதூறு சுமத்தியவர் ஆவீர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5048

திர்மிதீ : 1857


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்


நான் நபி (ஸல்) அவர்களிடம் நபியே தங்கள் துணைவியார் சபியாவிடம் என்னென்ன குறைகள் இருக்கிறது அதாவது அவர் குள்ளமாக இருப்பது உங்களுக்கு போதும் என்று குறை கூறினேன்.


அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ சொன்ன வார்த்தைகளை கடல் நீரில் கலக்கப்பட்டால் கடலையே கலங்கடித்து விடும் என்று கூறினார்கள்.


நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் குறித்து ஒப்பனை காட்டி பேசினேன் அப்போது நபியவர்கள். ஒரு மனிதரை ஒப்பனை காட்டி பேசுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார்கள்.


நூல் : அபூதாவூத் ,திர்மிதீ 2426.


கருத்துகள்