சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்
சமூக வலைதளம் என்பது தற்போதைய சமூகத்தில் அசைக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. ஒரு செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உள்ளங்கையில் இருக்கும் தொலைபேசியே போதுமானதாக ஆகிவிட்டது. இதற்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக உள்ளன. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக சக மனிதர்களைத் தொடர்பு கொள்வது எளிதாக ஆகிவிட்டது. இப்படி இதனுடைய நன்மைகள் பலவாறு இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளும் மற்றொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.