புதன், ஏப்ரல் 24, 2024

தங்க ஓடை: மனிதனின் பேராசை

 


தங்க ஓடை: மனிதனின் பேராசை


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஆதமுடைய மகனுக்கு தங்கத்தில் ஒரு ஒடயிருந்தால் இரு ஓடை வேண்டும் என்று விரும்புவான். அவனது வாயில் மண்ணறையின் மண்னைத்தவிர வேறு ஒன்றும் நிரப்பாது. தவ்பா செய்பவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

செவ்வாய், ஏப்ரல் 23, 2024

ஒற்றைச்செறுப்பு

 


ஒற்றைச்செறுப்பு


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்


“ உங்களில் ஒருவரின் செருப்பின் வார் அறுந்துவிட்டால் அதை சரி செய்யும் வரை மற்றொரு செருப்பில் மட்டும் நடக்கவேண்டாம்” (முஸ்லிம்)

நான் அப்படிச் செய்தேன் இப்படி செய்தேன்.

 


இறைவன் தான் நம் அனைத்து நிலைகளையும் சரிசெய்கிறான், ஆனால் மனிதன் தான் என்னவோ சாதனைகள் புரிந்து விட்டது போன்று “நான் அப்படிச் செய்தேன் இப்படி செய்தேன். எல்லாம் என் அறிவு, புத்தி கூர்மையில் தான் இவ்வளவும் நடந்தது என்று தப்பட்டம் அடிக்கிறான்". அந்தோ பரிதாபம்! திரைக்கு பின்னால் இருந்து திறப்பட செயல்படுத்திக் கொண்டிருக்கும் அந்த திறமையின் பலம் புரியவேண்டுமே! இந்த ஆத்மாவிற்கு அந்த நிலை புரியவே ஆத்மாக்களுக்கு அழைப்பு கொடுக்கிறது மேலே உள்ள நபிமொழி.

மனிதனைப் புனிதனாக்கும் மாபெரும் பன்னிரண்டு விஷயங்கள்

 .


மனிதனைப் புனிதனாக்கும் மாபெரும் பன்னிரண்டு விஷயங்கள்


ஹஜ்ரத் கஃபுல் அஹ்பார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது: நான் தவ்றாத், ஐபூர், இன்ஜீல், குர்ஆன் ஷரீப் ஆகிய நான்கு வான்மறைகளையும் கற்றுணர்ந்திருக்கிறேன்; ஆயினும் அவைகளிலிருந்தும் பன்னிரண்டு விஷயங்களையே பொறுக்கி எடுத்து அவைகளை ஒரு காகிதத்தில் எழுதி என் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு அனுதினமும் அவ்விஷயங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் மும்முறை நோட்டமிட்டு என்னைத் திருத்திக் கொள்வேன். அவைகள்:-

சனி, ஏப்ரல் 20, 2024

முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?


முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது? 


"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்'' என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும்போது மனிதகுல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இஸ்லாம் அல்லாத எந்தவொரு மதத்தையும் இன்னொரு மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுக்கிடையே அதிகமான ஒற்றுமைகளும், குறைந்த அளவு வேற்றுமைகளும் இருப்பதைக் காணலாம்.