ஒரு ரமளான் மாதத்தில்

 


ஒரு ரமளான் மாதத்தில்


தள்ளாத வயதுடைய ஒரு முதியவர் ஒரு மூலையில் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்


அப்போது சில இளைஞர்கள் அவர் அருகில் வந்து, “என்ன..பெரியவரே ! உங்களுக்கு நோன்பில்லையா? என்று கேட்டனர்.


அதற்கு அவர் சொன்னனார்:


“ யார் சொன்னது எனக்கு நோன்பு இல்லையென்று ? எனக்கு நோன்பு உண்டு.! ஆனால் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது. “


இளைஞர்கள் பலமாக சிரித்தனர்.


ஹ..ஹா..ஹ..இப்படியொரு நோன்பு உண்டா..?

இது என்ன வகை நோன்போ.?


முதியவர் சொன்னார் :


“ ஹே.. எனக்கு பொய் பேசும் பழக்கம் கிடையாது.


யார்மீதும் கெட்ட எண்ணம் வைப்பதில்லை.


யாரையும் பரிகாசம் செய்வதில்லை.


எவரையும் ஏளனம் செய்வதில்லை.


எவர் மனதையும் நோகடிப்பதில்லை.


அவதூறு சொல்வதில்லை. புறம் பேசுவதில்லை.


எவர் மீதும் பொறாமை கொள்வதில்


ஐந்து வேளை தொழுகையும் நேரம் தவறாமல் பள்ளிக்கு சென்றுதான் தொழுவேன்.


குன் ஆன் ஓதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதுண்டு.


அப்புரம்…ஹராமான எதையும் சாப்பிடுவதில்லை.


தகுதியற்ற எந்தப் பொருளையும் பெற்றுக்கொள்வதில்லை. பொருப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் நம்பிக்கையோடு நடந்து கோள்வேன்.


ஆனால் இப்போது எனக்கு வயதாகிவிட்டதாலும் இயலாமையினாலும் என் வயிற்றுக்கு நோன்பு இல்லை. “


இவ்வாறு கூறிவிட்டு முதியவர் அந்த இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார் :


“அது இருக்கட்டும்… நீங்கள் நோன்பு வைத்திருக்கிறீர்களா.?”


அதற்கு , இளைஞர்களில் ஒருவன் தலைகுனிந்தவாறே சொன்னான் :


“ இல்லை..!நாங்கள் சாப்பிடாமல் இருக்கிறோம் அவ்வளவுதான்.!”


*****************


தெரிந்து கொள்ளுங்கள்,!


இஸ்லாம் சொல்லும் நோன்பு எனும் மகத்தான இபாதத் என்பது ,


தங்கள் விருப்பம்போல் எதை வேண்டுமானாலும் செய்து திரிந்து கொண்டு


சாப்பிடாமல் வெறுமனே பகல் முழுதும் பட்டிணி கிடப்பதல்ல. மாறாக,


தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுதல், குர்ஆன் ஓதுதல், அதனை விளங்கிப் படித்தல், துஆ, திக்ருகள், பாவமன்னிப்பு கேட்டல், நற்குன நடத்தை, கனிவான பேச்சு,


அனைத்து ஹராமான காரியங்களை விட்டும் விலகி இருத்தல்,


எல்லாவற்றுக்கும் மேலாக இவையனைத்தையும் படைத்த இறைவனின் உவப்பை மட்டுமே எதிர்பார்த்து கடைபிடிக்க யாரால் முடியுமோ அவர்களுக்கானதுதான் நோன்பு.


-இறைவன் நம் அனைவரையும் இத்தகைய நோன்பாளிகள் கூட்டத்தில் சேர்ப்பானாக.!

ஆமீன்


கருத்துகள்