பட்டப் பெயர்களால் புண்படுத்தாதீர்(புறம்/குறை )part4 )


 பட்டப் பெயர்களால் புண்படுத்தாதீர்(புறம்/குறை )part4 )

وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌

உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். 


இந்தப் பெயர்கள் ஒருவருக்கு இம்சிக்குமோ கோபப்படுத்துமோ அத்தகைய அடைமொழி பெயர்களை பயன்படுத்துவது கூடாது.


நபித்தோழர் அபூஜபீரா பின் அள்ளஹ்ஹாக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்


இந்த வசன தொடர் பனூ சலீமா குலத்தார் குறித்து அருளப்பட்டது நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு வந்த போது எங்களில் யாருக்கும் இரண்டு அல்லது மூன்று பெயர்கள் இல்லாமல் இருந்ததில்லை. அந்தப் பெயர்களில் ஒன்றை கொண்டு அவர்களில் யாரையேனும் அழைத்தால் அல்லாஹ்வின் தூதரே இந்தப் பெயரால் அவர் கோபப்படுவார் என்று மக்கள் கூறுவர் அப்போதுதான் இந்த வசனம் அருளப்பட்டது.


நூல் : முஸ்னத் அஹ்மத் திர்மிதி 3191 அபூதாவூத் இப்னுமாஜா


பாவப் பெயர் மிகவும் கெட்டது

بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ 


நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். 


அதாவது பாவத்தைக் குறிக்கும் பெயரும் வர்ணனையும் மிகவும் கெட்டது அதுதான் மோசமான பட்டப்பெயர் என்று சொல்லப்படுகிறது.


وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.


அண்டை வீட்டார் பற்றிய புகார்

உக்பா பின் ஆமிர் ( ரலி ) அவர்களின் எழுத்தாளர் துகைன் பின் ஆமிர் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது.


நான் உக்பா ( ரலி ) அவர்களிடம் , ” எங்களுக்குச் சில அண்டை வீட்டார் உள்ளனர் .அவர்கள் மது அருந்துகின்றனர் எனவே அவர்களைப் பிடித்துக் கொண்டு செல்வதற்காக காவலர்களை நான் அழைக்கப் போகிறேன் என்று கூறினேன்.


அதற்கு உக்பா ( ரலி ) அவர்கள் , அப்படிச் செய்யாதே ! மாறாக , அவர்களுக்கு அறிவுரை கூறு ; எச்சரிக்கை செய் ‘ ‘ என்று கூறினார்கள்.


நான் அப்படியே செய்தேன் . ஆனாலும் அவர்கள் ( மதுவிலிருந்து ) விலகவில்லை . எனவே , நான் உக்பா ( ரலி ) அவர்களிடம் ( மறுபடியும் வந்து , ” நிச்சயமாக நான் அவர்களை மது அருந்த வேண்டாமெனத் தடுத்தேன் ; இருந்தும் அவர்கள் விலக வில்லை ; எனவே , அவர்களைப் பிடித்துச் செல்வதற்காகக் காவலர்களை நான் அழைக்கப்போகிறேன் ” என்று கூறினேன் . 


அப்போது உக்பா ( ரலி ) அவர்கள் , – ” உனக்குக் கேடுதான் ; அப்படிச் செய்யாதே ; ஏனெனில் , ‘ யார் இறைநம்பிக்கையாளர் ஒருவரின் மானத்தை மறைக்கின்றாரோ அவர் , உயிருடன் புதைக்கப்பட்ட பெண் சிசுவை அதன் அடக்கத்தலத்திலிருந்து உயிரோடு மீட்டியவரைப் போன்றவர் ஆவார் ‘ என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறி யதை நான் செவியுற்றுள்ளேன் ” என்று என்னிடம் கூறினார்கள்.


நூல் : அபூதாவூத் , முஸ்னத் அஹ்மத்.

கருத்துகள்