விபச்சாரம் செய்தாலும் குறை சொல்லாதீர்கள்(புறம்/குறை.part7 )


 விபச்சாரம் செய்தாலும் குறை சொல்லாதீர்கள்(புறம்/குறை.part7 )

பொதுவாக இன்று ஒருவரின் முன்னேற்றத்தை வழிகெடுக்க அவர்களின் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த அவதூறை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாம் துருவித்துருவி ஆராய்வதை நிறுத்த வேண்டும் என்று ஒருவர் விபச்சாரம் செய்தாலும் அதை வழியே சென்று ஆராயக் கூடாது என்று சொல்கிறது


நபி(ஸல்) அவர்களிடம் மாயிஸ் இப்னு மாலிக் அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ அவளை முத்தமிட்டிருக்கலாம் அல்லது கை விரலால் தொட்டிருக்கலாம் அல்லது அவளை பார்திருக்கலாம் எனக் கூறினார்கள். அதற்கு மாயிஸ் (ரழி) அவர்கள் இல்லை நான் விபசாரம் செய்தேன் எனக் கூறினார்கள். அதன் பிறகு அவருக்கு கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்பட்டது’ என இப்னு அப்பாஸ்; (ரழி) அறிவித்தார்கள். ஆதாரம் : புஹாரி (6824)


இவ்வரலாற்று சம்பவத்தில் நபி(ஸல்) அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ மாயிஸ் (ரழி) இடம் நீ எந்த பெண்ணுடன் விபசாரம் செய்தாய் என கேட்கவுமில்லை அதனை துருவித் துருவி ஆராயவும் இல்லை. இவ்வாரான ஒரு சம்பவம் நம் மத்தியில் நடை பெற்றால், நம் சாமூகத்தின் நிலை என்னவாக காணப்படும் என்பது நாம் அறிந்த விடயமே. நமது கற்பனைக்கு அப்பாற்பட்டதுமல்ல. 


‘நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, அல்லாஹ்வுடைய தூதரே! நான் தண்டனை நிரைவேற்றப்பட வேண்டிய பெண்ணாகிவிட்டேன், என்னை தூய்மைப் படுத்துங்கள் என்றால். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாவமண்ணிப்பு தேடிக் கொள் என்றார்கள், உடனே அப்பெண், அல்லாஹ்வுடைய தூதரே! எனது வயிற்றில் விபசாரத்தின் மூலம் சிசு உண்டாகியுள்ளது எனக் கூறினால். நபி (ஸல்) அவர்கள் குழந்தை பெற்றவுடன் வா என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அப்பெண் குழந்தையுடன் வந்தபோது குழந்தைக்கு பால்குடி மறந்த பின் வா எனத்திருப்பி அனுப்பினார்கள், குழந்தை பால் குடி மறந்த பின் மீண்டும் அப் பெண் வந்தால். அதன் பின்னர் தண்டனை நிறைவேற்றப் பட்டது.’ ஆதாரம்: முஸ்லிம் (1695).


இப்பெண்னிடம் எத்தவொரு ஸஹாபிப் பொண்களோ அல்லது ஸஹாபாக்களே நீ யாருடன் விபசாரம் செய்தாய் எனக் கேட்கவுமில்லை, அதனை துருவித் துருவி ஆராயவுமில்லை. ஆனால் இப்படியான ஒரு சம்பவம் நம் சமூகத்தின் மத்தியில் நடைபெற்றால். அப்பெண்ணை மாத்திரமல்ல அப்பெண்ணின் குடும்பத்தாறையும் நம் சமூகம் விட்டு வைக்க மறவாது.


கருத்துகள்