அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இந்த உலகத்தில் வாழ , ஒரு இருப்பிடம், உணவு, உடை , தண்ணீர் இவைகள் போதும்! இவைகளில் ரொம்ப முக்கியமானவை உணவும், தண்ணீரும் தான்! மற்ற இரண்டும் இல்லாவிட்டால் சிரமம் தான், ஆனால் சமாளித்து கொள்ளலாம்... ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவும், தண்ணீரும்தான் இந்த இரண்டும் இல்லை என்றால் , நிச்சயமாக மனிதன் உயிர் வாழமுடியாது!
இந்த உலகத்தில் பெரும்பாலும் மக்கள்கள் வறுமையிலும் , கஷ்டத்திலும் தான் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை! அந்த வறுமையை போக்க , கஷ்டத்தை நீக்க அந்த நாட்டின் ஆட்சியாளர் தான் பொறுப்பாளியாக இருக்கிறார் ! ஆனால், அங்கே என்ன நடக்கிறது ? சாமானிய மக்கள்களுக்கு நன்மையை நாடாமல், ஒரு சிலருக்காக மட்டும் நன்மையை நாடக்கூடிய ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் , ஆகையால் அங்கே ஒரு பக்கம் அநீதி நடக்கிறது. ஒரு நாட்டில் , அங்கே பல மதத்தினர்கள் இருந்தபோதிலும் , ஆட்சி செய்யக்கூடியவர்கள் எல்லோருக்கும் சமமாக , நேர்மையாக, சமத்துவமாக நடக்க வேண்டும், மாறாக நிச்சயமாக அங்கே நிறைய குழப்பங்கள், அநீதிகள் , அநியாயங்கள், நேர்மையன்றி ஆட்சி நடப்பதற்கான நிறைய சாத்தியங்கள் இருக்கிறது!