அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அவசரபடாமல் இருத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவசரபடாமல் இருத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 03, 2016

அவசரம்! அவசரம் !

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்றுவிடும் .
கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்..
அல்லாஹ்வின் திருபெயரால் ........
அல்லாஹ்  கூறுகிறான்..
''மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான் .''[21.37]

இன்றைய நவயுகத்தில் எங்கும், எதிலும் அவசரக்கோலம் காணப்படுகிறது. அதனால் விளையும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை.

வீதியில் செல்லும் பாதசாரிகளும், வாகனங்களும் குறிப்பிட்ட இலக்கை வேகமாக சென்றடைந்து விட வேண்டுமெனும் நோக்கில் அதிவேகமாகச் செல்ல முற்படும்போது ஆபத்துக்கள் சம்பவிக்கின்றன. இதை உணர்த்துவதற்காக சில ஊர்திகளின் பின் பகுதியில் ''பதறினாள் சிதறிவிடுவாய் '' என்று எழுதப்படுகிறது.

ஞாயிறு, ஜூன் 22, 2014

ஆத்திரமும் , அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!

மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,
செயற்பாடுகளாலும் பாழாக்கிவிடும் அதே வேளை மனைவியர்கள் தமக்கு செய்யும் அளப்பரிய பணிகளுக்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட இவர்கள் கவனிப்பதில்லை.

வியாழன், ஜனவரி 30, 2014

அவசரம் வேண்டாமே ! ஆனால், இதில் அவசரம் வேண்டுமே!



அவசரம் வேண்டாமே ! ஆனால், இதில் அவசரம் வேண்டுமே!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு ஆண்/பெண் மீது கடமை!
மார்க்க கல்வி இல்லாதனால் , மூடப் பழகங்கள், சடங்கு ,சம்ப்ராதாயம் , பித் அத் மற்றும் இன்னும் நூதன வழிப் பாடுகள் ,செயல்கள் . நம்மிடத்தில் நிறைய இருக்கிறது .அவைகளை தவிர்க்க , மார்க்க கல்வி அறிய வேண்டும். நாம் முயர்ச்சிச் செய்ய வேண்டும் . ஒருகாலத்தில் மார்க்க கல்வியை அறிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. இன்று "அல்ஹம்துலில்லாஹ் " நிறைய தமிழ் இஸ்லாம் வலைத்தளங்கள் இருக்கிறது. ஒருநாளைக்கு கொஞ்சம் நேரம் அல்லாஹுக்காக ஒதுக்கினால் , அல்லாஹ் உங்களுக்கு கிருபைச் செய்வான்!

திங்கள், ஏப்ரல் 01, 2013

பொறுமை ,அவசரபடாமல் இருத்தல் ,மென்மை

பொறுமை ,அவசரபடாமல் இருத்தல் ,மென்மை 

அல்லாஹு தஆலா கூறுகிறான் :
....கோபத்தை மென்று விழுங்குபவர்களும் மக்களை மன்னித்து விடுபவர்களும் -நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான் . அல்குரான் 3:134)

மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவிலிகளை புறக்கணிப்பீராக !                                          அல்குரான் 7:199)

நன்மையும் தீமையும் சமமாகாது .அழகானதைக் கொண்டு பதில் கொடுப்பீராக !அப்பொழுது உமக்கும் அவருக்கும் இடையில் விரோதமுள்ளவர் ,நெருங்கிய தோழர் போன்று ஆகிவிடுவார் ;பொறுமை செய்வோரே அதனை பெற்றுக் கொள்வார் ;மக்கத்தான நர்பாகியமுடைய்வரே அதனைப் பெற்று கொள்வார் .  (அல்குரான் 41:34,35

எவரொருவர் பொறுமையை கடைப்பிடித்து,மன்னித்து விட்டாரோ நிச்சயமாக அது காரியங்களில் உறுதியானதாகும் . அல்குரான் 42:43)


ஹதீஸ் :

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிகிறார்கள் : நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் .எல்லாக் காரியங்களிலும் மென்மையை நேசிக்கிறான் .(புகாரி,முஸ்லிம்)


அண்ணல் நபி(ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :(மக்களிடம்) மென்மையோடு நடந்து கொள்ளுங்கள் !கடினமாக நடந்து கொள்ளாதீர்கள் !நல்வாழ்த்துக் கூறுங்கள்!(அவர்களை)வெறுக்காதீர்கள்! (புகாரி :முஸ்லிம்)

ஹஜ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துளேன் .அவர்கள் கூறினார்கள் :மென்மையை யார் இழந்து விடுகிறாரோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்து விடுவார் .(முஸ்லிம்)

மென்மையை பற்றியும் ,பொறுமையாக இருப்பதை பற்றியும் ;மக்களை மன்னிக்கவும் ,அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதை பற்றியும் ,நாம் அல்லாஹ் வின் வசனமூலமாக ,அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் மூலமாக அறியலாம் !ஒருவர் மென்மையை இழந்தார் என்றால் ,அவர் அனைத்து நன்மையையும் இழந்தவர் ஒன்ற ஆவார் .மக்களிடம் கடுமையாக நடக்க கூடாது என்பதை பற்றி இந்த ஹதீஸ் நமக்கு எச்சரிக்கை செய்கிறது ,ஒருவர்கொருவர் சலாம் சொல்ல வேண்டும் ! எல்லோரிடம் நாம் மென்மையாக நடக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக ..ஆமீன் ...
வஸ்ஸலாம் !!!