அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஆதமுடைய மகனே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதமுடைய மகனே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

ஆதமுடைய மகனே!

ஆதமுடைய மகனே!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

ஆதமுடைய மகனே! அல்லாஹூ தஆலாவின்  மீதுள்ள நம்பிக்கையிலிருந்து தளர்ந்துவிடாதே ! ஏனென்றால் ஷைத்தானாவன் உனக்கு வறுமையைக் காட்டி அல்லாஹூ தஆலாவின்  இபாதத் செய்வதிலிருந்து உன்னை தடுத்திட முயற்சி செய்வான், எனவே, நீர் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாதே !

ஆதமுடைய மகனே! உன்னையே நீ சிந்தித்துப் பார்! நீ இல்லாதவனாக இருக்க, ஒரு துளி இந்திரியத்திலிருந்து அல்லாஹூ தஆலா  உன்னை இரு அழகான மனிதனாக [மேலான படைப்பாக] படைத்தான். நீ உன் தாய் வயிற்றிலிருக்கும் போதே உன்னுடைய உடலில் ரூஹை அவனே புகச் செய்தான். அந்த ரூஹ் புகுந்ததை உன் தாய் கூட அறியமாட்டாள் . நீ உன் தாய் வயிற்றிலிருக்கும்போது உன்னைப் பாதுகாத்தது யார்? அவன்தானே [அல்லாஹ் ] பாதுகாத்தான்.