மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி இந்த தொழுகையைப் பற்றிதான்! |
கொள்கை மட்டும் போதாது !தொழுகையும் வேண்டும்!!
Bismillah...
பெரும்பாலும் மக்கள்கள் இந்த தொழுகை விஷயத்தில் அசட்டையாகவும்,அலட்சியமாகவும் இருந்துக்கொண்டுதான் வருகிறார்கள்.சிலருக்கு வணக்க வழிப்பாடுகளுக்கு மட்டும் ஆர்வம் இருப்பதில்லை. மற்ற உலக காரியத்திற்காக ரொம்ப ஆரவமாக ஈடுபாடாக இருப்பார்கள். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய ஒரு ஹதீஸ் கருத்து.. எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் உடையவர்கள். எதிரிகள்
செய்த ஏராளமான கொடுமைகளை மன்னித்திருக்கிறார்கள். இப்படி மென்மையான குணம்
கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஒருவரை எரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
என்றால் அவர் செய்த குற்றம் எவ்வளவு பெரிய குற்றமாக இருக்கும்?
தொழுகைக்காகப் பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி (ஸல்) அவர்கள்
எரிக்க வேண்டும் என்று நாடினார்கள். ஜமாஅத் தொழுகை பள்ளியில் நடக்க,
அதைப் பொருட்படுத்தாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இதை மனதில்
பதிய வைக்க வேண்டும்.